துருக்கி: இந்தியா பாகிஸ்தான இடையிலான மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் இந்தியர்கள் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்வதை நிறுத்திக் கொண்டனர் இதன் காரணமாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக துருக்கி நாட்டு துருக்கி ஏர்லைன்ஸின் பங்கு மதிப்பு ஒரே மாதத்தில் 10% வரை சரிவடைந்திருக்கிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் மீதும் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது துருக்கி நாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கிறோம் என அறிவித்தது. துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக வெளிப்படையாக அறிவித்ததை அடுத்து இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் துருக்கிக்கு தாங்கள் போட்டு இருந்த சுற்றுலாத் திட்டங்களை ரத்து செய்தனர்.

கோடை விடுமுறை காலத்தில் துருக்கி நாட்டிற்கு செல்வதற்காக முன்கூட்டியே செய்திருந்த விமான டிக்கெட் மற்றும் தங்கும் இடத்திற்கான பதிவுகளை பெரும்பாலான இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர். மேக் மை டிரிப் தளம் வாயிலாக துருக்கி நாட்டிற்கு விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது 60 சதவீதம் குறைந்திருப்பதாகவும் ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து செய்யப்படுவது 250 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈஸ் மை ட்ரிப் தளத்தின் தலைவரான நிஷாந்த் பெட்டி 2022 ஆம் ஆண்டில் 2.3 லட்சம் இந்தியர்கள் துருக்கிக்கு சுற்றுலா சென்றனர் என்றும் 2023 ஆம் ஆண்டில் இது 2.87 லட்சமாக அதிகரித்தது என்றும் கூறுகிறார். துருக்கிக்கு சுற்றுலா செல்லக்கூடிய ஒவ்வொரு தனிநபரும் தலா 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள் இதன் மூலம் அந்நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பட்டு இருக்கிறது என கூறுகிறார்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் துருக்கி நாட்டிற்கு மூன்றாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது என தெரிவிக்கிறார். இந்த ஆண்டு துருக்கியின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு காரணமாக பெரும்பாலான இந்தியர்கள் தங்களுடைய சுற்றுலா திட்டங்களை ரத்து செய்துவிட்டனர். இது துருக்கி நாட்டு சுற்றுலாத் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி தந்துள்ளது குறிப்பாக துருக்கி நாட்டுக்கு சொந்தமான துருக்கி ஏர்லைன்ஸ் பங்கு மதிப்பு கடந்த ஒரு மாத காலத்திலேயே சுமார் 10% வரை சரிவடைந்து இருக்கிறது.
அந்நாட்டு கரன்சியான லிராவின் மதிப்பு படி கடந்த மாதம் இதே காலகட்டத்தில் துருக்கி ஏர்லைன்சின் ஒரு பங்கு மதிப்பு 312.75 லிராக்களாக இருந்து தற்போது 279 லிராக்களாக குறைந்து இருக்கிறது. பல்வேறு இந்திய சுற்றுலாப் பயணிகளும் தங்களுடைய துருக்கிக்கான பயண டிக்கெட்டுகளை ரத்து செய்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications