வருமான வரிச் செலுத்துவதில் இருந்து தப்பிக்கச் சாமானிய மக்களை விடவும் அதிகம் முயற்சி செய்வது பெரும் பணக்காரர்கள் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அமெரிக்கா போன்ற பெரும் பொருளாதார நாடுகளில் இருந்து இந்தியா போன்ற வளரும் நாடுகள் வரையில் இதே நிலை தான்.
சமீபத்தில் அமெரிக்காவில் ஜெப் பைசோஸ் உட்படப் பல பெரும் நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் பல வருடங்களில் ஒரு டாலர் கூட வரி வருமானம் செலுத்தாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது பெரும் பணக்காரர்கள் சில வருமான வரிச் செலுத்துவதில் இருந்து தப்பிக்கப் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.
பெரும் பணக்கார இந்தியர்கள்
இந்தியாவில் கடந்த சில வருடமாகப் பெரும் பணக்கார இந்தியர்கள் வெளிநாட்டில் நூறு கோடி ரூபாய் மதிப்பிற்கும் அதிகமான தொகைக்கு ஜம்ரோ லைப் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வு செய்து முதலீடு செய்து வருவது அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.
லைப் இன்சூரன்ஸ் திட்டம்
அரசிடம் இருந்து அனுமதி பெறாமல் எந்தொரு இந்தியரும் வெளிநாட்டு அமைப்பு மற்றும் நிறுவனங்களிடம் இருந்து லைப் இன்சூரன்ஸ் பெறுவதற்குத் தடை செய்யப்பட்டு உள்ள வேளையிலும், சிலர் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து லைப் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கியுள்ளனர்.
அமலாக்கத் துறை நோட்டீஸ்
இந்நிலையில் இந்தப் பிரச்சனையை அமலாக்கத் துறை கையில் எடுத்துள்ள வேளையில், வெளிநாட்டு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பெற்ற 25 பணக்காரர்களுக்கு அமலாக்கத் துறை விதிகளை மீறியதற்கான நோட்டீஸ்-ஐ அனுப்பியுள்ளது.
ஜம்போ லைப் இன்சூரன்ஸ்
வெளிநாட்டில் வாங்கப்படும் இந்த ஜம்போ லைப் இன்சூரன்ஸ் திட்டத்திற்கான ப்ரீமியம் மிகவும் குறைவு என்பது மட்டும் அல்லாமல் சிங்கிள் ப்ரீமியம் வசதியில் கிடைக்கும் காரணத்தால் பெரும் பணக்காரர்கள் இதை முதலீடாகக் கணக்கிட்டு வருமான வரியிலும் சலுகை பெற்று வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு
இதேபோல் பெரும் பணக்காரர்கள் மறைமுகமாக வெளிநாட்டில் வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு இத்தகைய இன்சூரன்ஸ் வாங்கும் போது வருமானத்தில் கீழ் கணக்கிற்கே இந்த முதலீடும், இன்சூரன்ஸ்-ம் வராமல் மறைக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் LRS திட்டம்
இந்தியாவில் பல பணக்கார குடும்பங்கள் ரிசர்வ் வங்கியின் Liberalised Remittance Scheme திட்டத்தின் கீழ் முதலீடு பெயரில் ஒரு ஹெட்ஜ் பண்ட் அல்லது குளோபல் ஈக்விட்டி நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது இந்த ஜம்ரோ லைப் இன்சூரன்ஸ் திட்டத்தை Add On ஆக அளிக்கப்படுகிறது.
2,50,000 டாலர் முதலீடு
ரிசர்வ் வங்கியின் Liberalised Remittance Scheme திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 2,50,000 டாலர் அளவிலான தொகையை வெளிநாட்டுப் பத்திரங்கள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்ய அனுமதி செய்யப்படுகிறது, ஆனால் நேரடியாக லைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications