வருமான வரிச் செலுத்துவதில் இருந்து தப்பிக்கச் சாமானிய மக்களை விடவும் அதிகம் முயற்சி செய்வது பெரும் பணக்காரர்கள் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அமெரிக்கா போன்ற பெரும் பொருளாதார நாடுகளில் இருந்து இந்தியா போன்ற வளரும் நாடுகள் வரையில் இதே நிலை தான்.
சமீபத்தில் அமெரிக்காவில் ஜெப் பைசோஸ் உட்படப் பல பெரும் நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் பல வருடங்களில் ஒரு டாலர் கூட வரி வருமானம் செலுத்தாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது பெரும் பணக்காரர்கள் சில வருமான வரிச் செலுத்துவதில் இருந்து தப்பிக்கப் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.
பெரும் பணக்கார இந்தியர்கள்
இந்தியாவில் கடந்த சில வருடமாகப் பெரும் பணக்கார இந்தியர்கள் வெளிநாட்டில் நூறு கோடி ரூபாய் மதிப்பிற்கும் அதிகமான தொகைக்கு ஜம்ரோ லைப் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வு செய்து முதலீடு செய்து வருவது அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.
லைப் இன்சூரன்ஸ் திட்டம்
அரசிடம் இருந்து அனுமதி பெறாமல் எந்தொரு இந்தியரும் வெளிநாட்டு அமைப்பு மற்றும் நிறுவனங்களிடம் இருந்து லைப் இன்சூரன்ஸ் பெறுவதற்குத் தடை செய்யப்பட்டு உள்ள வேளையிலும், சிலர் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து லைப் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கியுள்ளனர்.
அமலாக்கத் துறை நோட்டீஸ்
இந்நிலையில் இந்தப் பிரச்சனையை அமலாக்கத் துறை கையில் எடுத்துள்ள வேளையில், வெளிநாட்டு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பெற்ற 25 பணக்காரர்களுக்கு அமலாக்கத் துறை விதிகளை மீறியதற்கான நோட்டீஸ்-ஐ அனுப்பியுள்ளது.
ஜம்போ லைப் இன்சூரன்ஸ்
வெளிநாட்டில் வாங்கப்படும் இந்த ஜம்போ லைப் இன்சூரன்ஸ் திட்டத்திற்கான ப்ரீமியம் மிகவும் குறைவு என்பது மட்டும் அல்லாமல் சிங்கிள் ப்ரீமியம் வசதியில் கிடைக்கும் காரணத்தால் பெரும் பணக்காரர்கள் இதை முதலீடாகக் கணக்கிட்டு வருமான வரியிலும் சலுகை பெற்று வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு
இதேபோல் பெரும் பணக்காரர்கள் மறைமுகமாக வெளிநாட்டில் வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு இத்தகைய இன்சூரன்ஸ் வாங்கும் போது வருமானத்தில் கீழ் கணக்கிற்கே இந்த முதலீடும், இன்சூரன்ஸ்-ம் வராமல் மறைக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் LRS திட்டம்
இந்தியாவில் பல பணக்கார குடும்பங்கள் ரிசர்வ் வங்கியின் Liberalised Remittance Scheme திட்டத்தின் கீழ் முதலீடு பெயரில் ஒரு ஹெட்ஜ் பண்ட் அல்லது குளோபல் ஈக்விட்டி நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது இந்த ஜம்ரோ லைப் இன்சூரன்ஸ் திட்டத்தை Add On ஆக அளிக்கப்படுகிறது.
2,50,000 டாலர் முதலீடு
ரிசர்வ் வங்கியின் Liberalised Remittance Scheme திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 2,50,000 டாலர் அளவிலான தொகையை வெளிநாட்டுப் பத்திரங்கள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்ய அனுமதி செய்யப்படுகிறது, ஆனால் நேரடியாக லைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications