அமெரிக்க நிதியியல் வரலாற்றில் கடந்த 28 வருடத்தில் செய்திடாத வகையில் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை சுமார் 0.75 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாகே வியாழக்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஜூன் 9, 2021ஆம் ஆண்டு நிலவரமான 52000 புள்ளிகள் இழந்து ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 75 அடிப்படை புள்ளி உயர்த்தி 1.5-1.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இக்கூட்டத்தில் பேசி பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவர் கூறுகையில் இந்த வட்டி விகிதம் உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் பணவீக்கம் 40 வருட உச்ச அளவான 8.6 சதவீதத்தில் இருந்து 2 சதவீதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான்.
ரெசிஷன்
இதேபோல் அமெரிக்கா பொருளாதாரம் ரெசிஷனுக்குள் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம், இதனால் ஜூலை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை கூடுதலாக 0.75 சதவீதம் வரை உயர்த்துவதில் உறுதியாக உள்ளோம் என கூறினார் ஜெரோம் பவல்.
1000 புள்ளிகள் சரிவு
இந்த அறிவிப்பால் வியாழக்கிழமை 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வெள்ளிக்கிழமை வர்த்தகத்திலும் தடுமாறி வருகிறது. மேலும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த 7 நாட்களுக்குள் 3800 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
20 சதவீதம் மார்கெட் கரெக்ஷன்
மும்பை பங்குச்சந்தை அதன் மோசமான நிலைக்கு செல்லவில்லை என்றாலும் 20 சதவீதம் மார்கெட் கரெக்ஷன் உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து சரிந்து வருகிறது, சென்செக்ஸ் 20 சதவீதம் சரிந்தால் 49,373 புள்ளிகளை எட்டும், நிஃப்டி 4,883 புள்ளிகளை எட்டும்.
அன்னிய செலாவணி
இதன் அடிப்படையில் இந்தியப் பங்குச்சந்தை, வர்த்தகச் சந்தையில் இருக்கும் முதலீடுகள் அடுத்தடுத்து வெளியேறத் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் துவங்கியுள்ளனர் இதனால் இந்தியாவின் அன்னிய செலாவணி குறைந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும்.
1.92 லட்சம் கோடி ரூபாய்
ஜூந் மாதம் மட்டும் இதுவரை 25500 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது, இதன் மூலம் 2022ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 1.92 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு சந்தையை விட்டு வெளியேறியுள்ளது.
ரூ.15.74 லட்சம் கோடி இழப்பு
கடந்த வெள்ளிக்கிழமை முதல் முதலீட்டாளர்கள் மொத்த சந்தை மதிப்பு சரிந்து வரும் நிலையில் வியாழக்கிழமை வீழ்ச்சி வரையில் ரூ.15.74 லட்சம் கோடியை பிஎஸ்ஈ முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். இதன் வாயிலாக சந்தை மூலதனம் ரூ.239.5 லட்சம் கோடியாக குறைந்தது - இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூ.240 லட்சம் கோடிக்குக் கீழே சரிந்தது இதுவே முதல்முறை.
More From GoodReturns

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!



Click it and Unblock the Notifications