யெஸ் பேங்கில் நடந்து வரும் குழப்பமான நிலைகளுக்கு மத்தியில், ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முன்பு, அதுவும் ஒரே ஒரு நாள் முன்பு ஒரு நிறுவனம், 265 கோடி ரூபாய் பணத்தினை எடுத்துள்ளது.
வதோரா நகராட்சியின் கீழ் செயல்படுத்தப்படும் சிறப்பு தேவைக்காக வாகனங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும், வதோரா ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் நிறுவனம் தான் யெஸ் பேங்கில் இருந்து இவ்வளவு பெரிய தொகையை எடுத்துள்ளது.
ஏற்கனவே பல குழப்பமான சூழ்நிலைக்களுக்கும் நிதி நெருக்கடியின் மத்தியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் பேங்கினை, ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
கேள்வி
இந்த நிலையில் தான் வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் பணம் மட்டுமே எடுக்க முடியும் என்ற அதிரடியான நடிவடிக்கையினையும் எடுத்துள்ளது. இதனால் ஏற்கனவே மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் அது எப்படி ஆர்பிஐயின் நடவடிக்கைக்கு முன்பு, அதுவும் சரியாக ஒரு நாள் முன்பு இவ்வளவு பெரிய தொகையினை எடுத்துள்ளது என்ற கேள்வி பலரின் மத்தியில் எழுந்துள்ளது.
இது அரசின் பணம்
ஆனால் இதற்கு சரியான பதில் அளிக்கும் விதமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மத்திய அரசு செலுத்திய தொகை தான் அது. பாங்க் ஆப் பரோடா வங்கியில் தொடங்கப்பட்ட புதிய வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாகவும். Vadodara Smart City Development Company நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுதிர் படேல் தெரிவித்துள்ளார். மேலும் யெஸ் பேங்கில் உள்ள பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அது இரண்டு நாட்களுக்கு முன்பு தான் திரும்ப பெறப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு முயற்சி
நிதி நெருக்கடியில் தத்தளித்து வரும் யெஸ் பேங்கினை தான் தற்போது ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. வங்கி மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி. இந்த நிலையில் தற்போது அதிகளவிலான வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் பேங்கினை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
இனி இவர் தான் நிர்வாகிப்பார்
தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் யெஸ் பேங்கினை எஸ்பிஐயின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் பேங்க் நிர்வாகம் செயல்படும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐயும் எல்ஐசியும் கூட்டாக இணைந்து யெஸ் பேங்கின் பங்குகளை வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications