இந்தியாவில் உணவு டெலிவரி சேவையில் ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் தான் முன்னிலையில் இருக்கின்றன . இந்த நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கும் இடையே நீண்ட காலமாக வரி தொடர்பான ஒரு விஷயத்தில் பெரிய முரண்பாடு நிலவி வந்தது. தற்போது அதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விளக்கம் தந்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டுள்ள விளக்கத்தின் படி ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி வரிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். இந்நிறுவனங்கள் வரிச்சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது ஸ்விக்கி, சோமேட்டோ வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் தொகையை செலுத்த வேண்டி இருக்கும் .

ஜிஎஸ்டி கவுன்சில், ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி சேவை வழங்கும் நிறுவனங்கள் அந்த சேவைக்கான ஜிஎஸ்டி வரியை டெலிவரி ஊழியர்கள் சார்பாக நிறுவனங்கள்தான் செலுத்த வேண்டும் என விளக்கம் தந்திருக்கிறது. அதாவது இந்த 18 சதவீத வரி ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற டெலிவரி சேவை நிறுவனங்களின் மீது விழுந்திருக்கிறது . இவற்றை இந்த நிறுவனங்கள் எப்படி கையாள போகின்றன என்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
எக்னாமிக்ஸ் டைம்ஸுக்கு பேட்டி அளித்திருக்கும் சோமேட்டோ, ஸ்விக்கி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் முதலில் இந்த வரி ஊழியர்களிடமிருந்து வசூல் செய்யப்படும் என்றும் இதனால் குறுகிய காலத்தில் அவர்களின் வருமானம் குறையலாம் என்றும் கூறியிருக்கின்றனர். பின்னர் படிப்படியாக இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது தான் சுமத்த போகிறோம் எனக் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாகவே உணவு டெலிவரி சேவை வழங்கக்கூடிய செயலிகளுக்கும் அரசுக்கும் இடையே இந்த ஜிஎஸ்டி விவகாரத்தில் பல்வேறு முரண்பாடுகள் நிலவிய வண்ணம் இருக்கின்றன . அதாவது இந்த நிறுவனங்கள் வசூல் செய்யக்கூடிய டெலிவரி கட்டணம் மற்றும் டெலிவரி ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளம் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியை யார் செலுத்துவது என்பது குறித்த குழப்பம் தான் அது.
இந்த சேவையை வழங்கக்கூடிய நிறுவனங்கள் இந்த ஜிஎஸ்டி வரியை ஏற்க வேண்டுமா அல்லது டெலிவரி ஊழியர்கள் ஏற்க வேண்டுமா அல்லது சேவையை பெறக்கூடிய வாடிக்கையாளர்களே ஏற்க வேண்டுமா என்பது குறித்து தொடர்ந்து முரண்பாடுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சோமேட்டோ நிறுவனம் 803 கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி வரி நிலுவையில் இருப்பதாக ஜிஎஸ்டி அதிகாரிகளிடமிருந்து நோட்டீஸ் பெற்றது. 2019 லிருந்து 2022 வரையிலான காலகட்டத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் ஆக இது அனுப்பி வைக்கப்பட்டது . இதேபோல ஸ்விகி நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தான் சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் தான் இதனை ஏற்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூறியிருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலை பொறுத்தவரை உணவு டெலிவரி சேவைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டாயம் என்கிறது. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடமிருந்து டெலிவரி கட்டணம் என்பதை வசூல் செய்வதால் இந்த ஜிஎஸ்டி வரியை செலுத்தும் பொறுப்பு நிறுவனங்களிடம் தான் இருக்கிறது என கூறுகிறது.
ஆனால் டெலிவரி சேவை வழங்கும் நிறுவனங்களோ வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறக்கூடிய டெலிவரி கட்டணம டெலிவரி ஊழியர்களுக்கு தான் வழங்கப்படுகிறது சில சமயங்களில் நாங்கள் வாடிக்கையாளரிடம் டெலிவரி கட்டணம் வாங்குவதில்லை தள்ளுபடி செய்து விடுகிறோம் இருந்தாலும் அதற்கு ஏற்றபடி நாங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு சம்பளம் வழங்கியாக வேண்டி இருக்கிறது என கூறுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications