மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றான வெசுவியஸ் இந்தியா நிறுவனம் சூளைகள், உலைகள் மற்றும் பிற தொழில்துறை உபகரணங்களில் பயன்படுத்தப்படும் வெப்ப எதிர்ப்பு பொருளான ரெஃபரக்டரியின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனுடன் டிவிடெண்ட் மற்றும் பங்கு பிரிப்பு நடவடிக்கையும் அறிவித்தது. இதனையடுத்து நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 6 சதவீதம் உயர்ந்தது.
2024 டிசம்பர் காலாண்டில் வெசுவியஸ் இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.60 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் சிறிது அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.57 கோடி ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் வெசவியஸ் இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.509 கோடி ஈட்டியுள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.417 கோடியாக இருந்தது.

வெசுவியஸ் இந்தியா நிறுவனம் 2024 டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.14.50 டிவிடெண்ட் வழங்க உள்ளதாக அறிவித்தது. அதேசமயம் இது நிறுவனத்தின் எதிர்வரும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் பெறுவதற்கான பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதியை 2025 மே 1ம் தேதியாக நிர்ணயம் செய்துள்ளது. 2025 மே 8ம் தேதி நடைபெறும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் டிவிடெண்ட் வழங்குவதற்கு பங்குதாரர்கள ஒப்புதல் அளித்தால் டிவிடெண்ட் வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெசுவியஸ் இந்தியா நிறுவனம் தனது பங்குகளை 1:10 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு செய்ய உள்ளது. அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரிக்கப்பட உள்ளது. பங்கு பிரிப்பு நடவடிக்கைக்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் எதிர்வரும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்கு பிரிப்புக்கு பங்குதாரர்கள் ஒப்புதலுக்கு உட்பட்டது. ஒப்புதல் வழங்கப்பட்டால் பங்குகள் பிரிக்கப்படும்.
நடுத்தர கால அளவில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2022 ஜூன் முதல் இதுவரையிலான காலத்தில் வெசுவியஸ் இந்தியா பங்கு முதலீட்டாளர்களுக்கு 300 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இந்த காலத்தில் இப்பங்கின் விலை ரூ.1,028-லிருந்து தற்போதைய வர்த்தக விலையான ரூ.4,164 வரை அதிகரித்துள்ளது. 2024 செப்டம்பரில் இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.5,999ஐ எட்டியது. இருப்பினும் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.
Story written: subramanian
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications