பொதுவாக எந்தவொரு நாட்டுக்கும் சுற்றுலா துறை வாயிலாக கணிசமான வருவாய் கிடைக்கும் மேலும் உள்ளூர் மக்களுக்கும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் ஒவ்வொரு நாடும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அண்மையில் இலங்கையும், தாய்லாந்தும் இந்திய பயணிகளை ஈர்க்கும் நோக்கில், தங்கள் நாட்டுக்கு வர விசா தேவையில்லை என்று அறிவித்தன.
இலங்கை அரசு தங்கள் நாட்டுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்பபதற்காக இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச விசா வழங்கப்படும் அறிவித்தது. மேலும், 2024 மார்ச் 31ம் தேதி வரை இது சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது என்று அந்நாடு அறிவித்தது.

தாய்லாந்து சுற்றுலா துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 நவம்பர் 10 முதல் 2024 மே 10ம் தேதி வரை தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை, தாய்லாந்தை தொடர்ந்து வியட்நாமும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் வியட்நாமை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்க. வியட்நாம் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது கம்யூனிசம், போர்கள்.
ஆனால் ஆசிய நாடுகளிலேயே மிகவும் அழகான நாடு என்றால் அது வியட்நாம் தான். கடற்கரைகள், ஆறுகள், புத்த பகோடாக்கள், தங்க கைகள் பாலம், ஹோய் அன் நகரம், பான் ஜியோக் நீர்வீழ்ச்சி என பல பார்த்து ரசிக்க பல சுற்றுலா தலங்கள் அந்நாட்டில் உள்ளது.
வியட்நாமின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குயென் வான் ஹங் பேட்டி ஒன்றில், சுற்றுலாவை மீட்டெடுக்க சீனா மற்றும் இந்தியா போன்ற முக்கிய சந்தைகளுக்கு குறுகிய கால விசா தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
எனவே இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வர விசா தேவையில்லை என்று விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், சுவீடன் மற்றும் பின்லாநது ஆகிய நாட்டவர்களை மட்டுமே விசா இல்லாமல் வியட்நாமுக்கு செல்ல முடியும்.

2023ம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் (ஜனவரி-அக்டோபர்) வியட்நாம் சுமார் 1 கோடி சர்வதேச பயணிகளை வரவேற்றுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 4.6 மடங்கு அதிகமாகும் மற்றும் இந்த ஆண்டுக்கான இலக்கையும் விஞ்சியது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத மத்தியில், அனைத்து நாடுகளை சேர்ந்த தனிநபர்களுக்கும் இ விசாக்களை வழங்க தொடங்கியது. இது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் வியாட்நாமுக்கு அவர்கள் வந்து செல்ல அனுமதிக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications