விநாயகர் சதுர்த்தி - நாளை பங்குச்சந்தை விடுமுறையா..?

மும்பை: நாடு முழுவதும் செப்டம்பர் 6 மற்றும் 7ஆம் தேதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குச்சந்தைகள் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஈக்விட்டி (equity) பிரிவு மற்றும் ஈகிவிட்டி டெரிவேட்டிவ் (equity derivative) பிரிவுகள் மற்றும் செக்யூரிட்டி லெண்டிங் அண்ட் பாரோயிங் (Security Lending and Borrowing) பிரிவுகள் முழுமையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி - நாளை பங்குச்சந்தை விடுமுறையா..?


வியாழக்கிழமை செப்டம்பர் 5ஆம் தேதி அன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிவடைந்து 82,201 புள்ளிகள் என்ற அளவில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 54 புள்ளிகள் சரிவடைந்து வர்த்தகத்தின் முடிவில் 25,154 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.

வியாழக்கிழமை அன்று பங்குச்சந்தையை பொறுத்தவரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா மோட்டார்ஸ், நெஸ்லே, இந்தியா பாரதி ஏர்டெல் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. இவற்றின் பங்கு மதிப்புகள் சராசரியாக 1.41% வரை சரிவடைந்தன.

30 சென்செக்ஸ் பங்குகளில் 20 பங்குகள் சரிவிலேயே முடிவடைந்தன. அதே வேளையில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள சுமார் 322 பங்குகள் தன்னுடைய 52 வார கால உச்சபட்ச மதிப்பை எட்டின. 30 பங்குகள் அதன் 52 வார கால குறைந்தபட்ச மதிப்புக்கு வீழ்ந்தன. மும்பை பங்குச்சந்தையை பொறுத்தவரை மொத்தம் உள்ள 4037 பங்குகளில் 2256 பங்குகளின் மதிப்பு வளர்ச்சியிலேயே இருந்தது.

அதே வேளையில் 1672 பங்குகள் சரிவிலும், 109 பங்குகளின் மதிப்புகள் மாறாமலும் முடிவடைந்தன. செப்டம்பர் 5ஆம் தேதியை பொருத்தவரை 398 பங்குகள் அப்பர் சர்க்கியூட் நிலையை எட்டின, 221 பங்குகள் லோயர் சர்க்கியூட் நிலைக்கு சென்றன. செப்டம்பர் 4ஆம் தேதி அன்று முதலீட்டாளர்கள் பலர் பங்குகளை விற்பனை செய்த நிலையில் வியாழக்கிழமை நிஃப்டி அதிலிருந்து மீண்டு வர முயற்சித்தது என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வியாழக்கிழமை அன்று காலை வர்த்தகத்தில் நிஃப்டி 25,275 புள்ளிகளை எட்டியது. அப்போது பெரும்பாலான முதலீட்டாளர்கள் கிடைத்தவரை இலாபத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் வர்த்தகம் செய்ததால் காலையில் நிஃப்டி புள்ளிகள் ஏறி வர்த்தகம் முடியும் தருவாயில் சரிந்தது என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்தது நிஃப்டின் ஒட்டுமொத்த புள்ளிகள் குறைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+