2024 டாடா ஐபிஎல் போட்டியில் விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூர் அணியை ஓடஓட விரட்டியது போல் தரமான வெற்றியைப் பதிவு செய்து, விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ப்ளேஃஆப்-ல் இருந்து மொத்தமாக வெளியேற்றியது.
பெங்களூர் அணியின் தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொண்டாடி வருகின்றனர். சமூகவலைத்தளத்தில் மீம், வீடியோ என கலாய்த்து தள்ளி வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அனல் பறந்தாலும் விராட் கோலி டி20 உலக கோப்பை போட்டிக்குப் பயிற்சி துவங்கும் முன்பு பெரும் பணத்தை சம்பாதித்துள்ளார்.

உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் செலிப்ரிட்டியாகவும், பிரபல கிரிக்கெட் வீரராகவும் இருக்கும் விராட் கோலி மற்றும் நடிகையும் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோ டிஜிட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர்.
இந்த முதலீடு, கோ டிஜிட் நிறுவனத்தின் ஐபிஓ மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. கோ டிஜிட் நிறுவனம் இன்று மே 23 ஆம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
கோ டிஜிட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.300 ஐ கடந்துள்ள நிலையில், இத்தனை நாள் தங்களது பங்குகளை விற்பனை செய்யாமல் வைத்திருந்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா-வின் முதலீடு நான்கு மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது.
இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்டஸ் (DRHP) அறிக்கையின்படி, விராட் கோலி ரூ.75 என்ற விலையில் 2,66,667 பங்குகளை வாங்கினார். இதன் மூலம் அவரது மொத்த முதலீடு ரூ.2 கோடி ஆகும். நடிகை அனுஷ்கா ஷர்மா ரூ.50 லட்சம் மதிப்பிலான 66,667 பங்குகளை வாங்கினார். இதன் மூலம், இந்த தம்பதியின் மொத்த முதலீடு ரூ.2.5 கோடியாக இருந்தது.
தற்போது பங்கு விலை ரூ.300 ஐ தாண்டியுள்ள நிலையில், விராட் கோலி முதலீடு செய்த ரூ.2 கோடி மதிப்பிலான பங்குகள் ரூ.8 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், அனுஷ்கா ஷர்மா முதலீடு செய்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பங்குகள் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், தற்போது அவர்களது 2.5 கோடி ரூபாய் முதலீட்டில் பெற்ற பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை (மே 23) தேதி தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடப்பட்ட கோ டிஜிட் பங்குகள், 5.15% பிரீமியத்தில் வர்த்தகமானது. இதன் வெளியீட்டு விலை ரூ.272 ஆக இருந்த நிலையில், பங்குச் சந்தையில் ரூ.286 என அதிகரித்துப் பட்டியலிடப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் (BSE) ரூ.281.1 என 3.35% அதிகரித்துப் பட்டியலிடப்பட்டது.
பட்டியலிடுவதற்கு முன்னதாக, பட்டியலிடப்படாத சந்தையில் கோ டிஜிட் பங்குகள் ரூ.25 பிரீமியத்தில் வர்த்தகமாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
கோ டிஜிட் நிறுவனம் புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ.1,125 கோடி முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டு இந்த ஐபிஓ வெளியிட்டது. இதற்கு சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்ததன் விளைவாக, இந்த ஐபிஓ கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாக முதலீடுகள் குவிந்தது, இதன் எதிரொலியாகவே மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications