சும்மா கிடக்கும் தங்கத்தில் முதலீடு செய்யாதீங்க.. இந்தியர்களுக்கு வாரன் பஃபெட் எச்சரிக்கை..!!

இந்தியர்கள் தங்கத்தின் மீது வைத்துள்ள பற்று ஆழமானது. இது ஒரு வெறும் முதலீடு மட்டுமல்ல. இது நமது கலாச்சாரத்தின் வேர்களில் உள்ள ஒரு பாதுகாப்பு உணர்வு. தீபாவளி போன்ற பண்டிகைகள் முதல் திருமணம் வரை, ஒவ்வொரு வீட்டிலும் தங்கம் ஒரு மதிப்புமிக்க சொத்தாக கருதப்படுகிறது. ஆனால், உலகின் மிகப் பெரிய முதலீட்டாளரும், முதலீட்டுக் கடவுளுமான வாரன் பஃபெட் பார்வையில், தங்கம் என்பது எந்தப் பலனும் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் ஒரு பயனற்ற சொத்து.

பஃபெட்டின் முதலீட்டுக் கொள்கை மிகவும் எளிமையானது. நீங்கள் முதலீடு செய்யும் பணம், காலப்போக்கில் தானே பெருகி, லாபம் ஈட்ட வேண்டும். அவரது கூற்றுப்படி, "தங்கம் எங்கோ ஒரு நிலத்தடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, உருக்கப்பட்டு, பின் மீண்டும் புதைக்கப்படுகிறது. அதைக் காவல் காக்க நாம் பணம் செலவழிக்கிறோம். அது எந்தப் புதிய மதிப்பையும், வருமானத்தையும் உருவாக்குவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

சும்மா கிடக்கும் தங்கத்தில் முதலீடு செய்யாதீங்க.. இந்தியர்களுக்கு வாரன் பஃபெட் எச்சரிக்கை..!!

கோகோ-கோலா அல்லது ஆப்பிள் போன்ற ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால், அந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் லாபம் ஈட்டி, வளர்ந்து, பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் அல்லது வட்டி வடிவத்தில் வருமானம் கொடுக்கும். ஆனால், தங்கம் டிவிடெண்டோ அல்லது வட்டியோ கொடுக்காததால், அது நீண்ட கால செல்வம் சேர்ப்பதற்கான ஒரு நல்ல வழி அல்ல என்பதுதான் பஃபெட்டின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.

ஆச்சரியம் கொடுத்த தங்கத்தின் வளர்ச்சி : இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் செயல்பாடு பஃபெட்டின் கருத்துக்குச் சவால் விடுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை போன்ற நிச்சயமற்ற காலங்களில், பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டபோது, தங்கம் அதன் விலையை தக்கவைத்துக் கொண்டு, முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்கியது.

சமீபத்திய ஆண்டுகளில், டாலர் மற்றும் ரூபாய் அடிப்படையில், தங்கம் பங்குச் சந்தையை (நிஃப்டி 50 உட்பட) விட அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளது. பொறுமையுடன் தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருந்தவர்கள், இந்த சொத்து மூலமாக கணிசமான லாபத்தைப் பார்த்துள்ளனர். இது, பொறுமை என்பது பங்குச் சந்தைக்கு மட்டுமல்ல, தங்க முதலீட்டிற்கும் அவசியம் என்பதை உணர்த்துகிறது.

பஃபெட் தனது கருத்தை சொன்னபோது, தங்கம் என்றால் சும்மா பூட்டி வைக்கப்பட்ட நகைகள் அல்லது நாணயங்கள் மட்டுமே. ஆனால் இன்று, முதலீட்டு வழிகள் மாறிவிட்டன. இந்தியாவில் சாவரின் கோல்ட் பாண்டுகள் (SGBs), கோல்ட் ஈ.டி.எஃப்.கள் (ETFs) மற்றும் டிஜிட்டல் தங்கம் போன்றவை தங்கத்தை ஒரு நவீன முதலீட்டு வழியாக மாற்றியுள்ளன. SGB-கள் வட்டியையும் வழங்குவதால், இன்றைய தங்கம் முற்றிலும் செயலற்ற சொத்து அல்ல என்பது தெளிவாக உள்ளது.

பெரும்பாலான இந்தியர்களுக்கு, தங்கம் என்பது அதிக வருமானத்திற்கான பந்தயம் அல்ல. அது ஒரு பாதுகாப்பு வலை. கடினமான காலங்களில் குடும்பத்தைக் காக்கும் கேடயமாகவும், அடுத்த தலைமுறைக்கான பாரம்பரிய சொத்தாகவும் தங்கம் கருதப்படுகிறது. எனவே, வாரன் பஃபெட்டின் அறிவுரை, "நீங்கள் தங்கத்தை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டாம். ஆனால் அதையே முழுமையாகச் சார்ந்து இருக்கவும் வேண்டாம். உற்பத்தி செய்யும் சொத்துக்களையும் உங்கள் போர்ட்ஃபோலியோவில் சமநிலையில் வைத்திருங்கள்" என்று கூறியிருக்கிறார். நீண்ட கால செல்வத்தை உருவாக்க வணிகங்களில் முதலீடு அவசியம் என்ற பஃபெட்டின் அறிவுரையை ஏற்றுக்கொண்டாலும், தங்கம் மூலதனப் பாதுகாப்பிற்கு மிக அவசியம் என்ற கருத்தும் இங்கே வலுவாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+