டெல்லி: இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிக தள்ளுபடியை வழங்குகின்றன, பிற நிறுவனங்களை அழிக்கும் வகையில் விலையை நிர்ணயிக்கின்றன என்று கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு (டிபிஐஐடி) துறைக்கு, புகார்கள் வந்துள்ளன என்று மத்திய, அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் நெறிமுறையற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுகின்றன என்றும், அரசின், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை வெளிப்படையாக மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள வர்த்தகர்கள் அமைப்பு, சமீபத்தில் நாடு தழுவிய போராட்டம் நடத்தின.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டின் இ-காமர்ஸ் போர்ட்டல்களுக்கு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று இந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
நெறிமுறை இல்லை
"ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள், இந்தியாவின் இ-காமர்ஸ் சந்தையை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை தங்களது நெறிமுறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் அரசின் அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை வெளிப்படையாக மீறுவதன் மூலம் மிகவும் நச்சுத்தன்மையடையச் செய்துள்ளன" என்று கண்டித்தனர் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
பியூஷ் கோயல் பதில்
இந்த பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது. மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் இதுபற்றி கூறியுள்ளதாவது: அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) விதிமுறைகளை மீறுவது, அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (ஃபெமா), 1999 இன்கீழ் தண்டனைக்குறிய குற்றம். ரிசர்வ் வங்கி ஃபெமாவை நிர்வகிக்கிறது. அமலாக்க இயக்குநரகம் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரம் கொண்ட அமைப்பு.
தள்ளுபடி அதிகம்
இ-காமர்ஸ் நிறுவனங்கள் மிக அதிக தள்ளுபடியை வழங்குகின்றன, வியாபார தர்மத்திற்கு மாறாக செயல்படுகின்றன என்று, எங்கள் துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன. சரக்குகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன என்றும் குற்றச்சாட்டுகள் வருகிறது. அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கை ஃபெமா சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு மூலம் இந்தக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெங்காயம்
வெங்காயம் குறித்த கேள்விக்கு வழங்கிய மற்றொரு பதிலில், உள்நாட்டில் வெங்காயம் கிடைக்கும் தன்மை மற்றும் விலை நிலைமையைக் கருத்தில் கொண்டு வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில், குறிப்பாக மகாராஷ்டிராவில், வெங்காய உற்பத்தியாளர்களுக்கு பாதகமான சூழல் இருப்பதாக எந்த அறிக்கையும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தனது பதிலில் அவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications