அட்சய திருதியை இந்துக்கள் வழிப்படும் புனித நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறையை அட்சய திருதியை என அழைக்கிறோம்.
அட்சய என்றால் வளர்க என்று பொருள். அந்த நாளில் தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் அது மேன்மேலும் வளரும் என்று நம்புகின்றனர். எனவே அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செழிப்பும் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியன்று வாங்கப்படும் தங்கத்தின் மதிப்பு குறையாது என்றும், தொடர்ந்து மதிப்பு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
அட்சய திருதியை
2022-ம் ஆண்டு, அட்சய திருதியை மே 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மே 3-ம் தேதி காலை 5.18 மணிக்குத் தொடங்கும் அட்சய திருதியை, மே 4-ம் தேதி காலை 7:32 மணி வரையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
அட்சய திருதியை முகூர்த்த நேரம்
இந்த வருடம் அட்சய திருதியை அன்று காலை 5:49 மணி முதல் மதியம் 12:13 முகூர்த்த நேரமாகக் குறித்துள்ளனர். இந்த நேரத்தில் மக்கள் தங்கம் வாங்க அதிகளவில் கடைகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தை இப்படியும் வாங்கலாம்
இந்தியர்கள் பெரும்பாலும் தங்கத்தை நகைகளாக வாங்க மட்டுமே விருப்பப்படுவார்கள். ஆனால் டிஜிட்டல், பத்திரம் பொன்ற வகையிலும் தங்கத்தை வாங்கலாம். தங்கத்தை நகைகளாக வாங்குவதை விட டிஜிட்டல் அல்லது பத்திர வடிவில் வாங்கும் போது அது பாதுகாப்பாக இருக்கும். யாராலும் திருட முடியாது என கூறப்படுகிறது. ஆபரணத் தங்கம் போலவே பத்திரம் அல்லது டிஜிட்டல் வடிவில் வாங்கும் தங்கத்தையும் எளிதாக விற்க முடியும்.
சவரன் தங்கம் பத்திரம் திட்டம்
சவரன் தங்கம் பத்திரம் திட்டம் மூலமாகக தங்கம் வாங்கும் போது கிராம் ஒன்று 50 ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியும் கிடைக்கிறது. தங்க நகைகளைப் போன்று இதையும் தேவையான போது வங்கிகளில் அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளவும் முடியும். தங்கம் பத்திரத்தை விற்க வேண்டும் என்றால் அந்த நாளில் தங்கம் என்ன விலை அதே விலைக்கு விற்று பணமாகவும் பெறலாம். 7.5 ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரம் முதிர்வடையும்.
மியூச்சுவல் ஃபண்டில் தங்கம்
தங்கத்தை மியூச்சல் ஃபண்டுகள் மூலமாகவும் வாங்கலாம். அதுவும் மொத்தமாகப் பணம் செலுத்தாமல் SIP முறையில் குறைந்தது 1000 ரூபாய் முதல் வாங்கலாம்.
டிஜிட்டல் தங்கம்
டிஜிட்டல் மூலம் தங்கம் வாங்கும் போது பேடிஎம் உள்ளிட்ட சில வாலட் சேவை நிறுவனங்கள் 1 ரூபாய்க்கு கூடு தங்கத்தை வாங்கும் சேவைகளை வழங்குகின்றன.
தானம்
எது எப்படி இருந்தாலும் அட்சய திருதியை அன்று பொருள் வாங்குவதை விட மற்றவர்களுக்கு தானம் செய்வது மிகவும் சிறந்தது. அட்சய திருதியையின் முக்கிய நோக்கமே எந்த பொருளாக இருந்தாலும் அதை தானம் செய்வது தான் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் அது இப்போது செல்வத்தைச் சேர்க்கும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இதுவும் வாங்கலாம்
அட்சய திருதியை அன்று அரிசி, கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் நல்லதுதான். இதை செய்வதன் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அட்சய திருதியை அன்று கடவுளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications