இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பும் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரை பேட்டரி தான் அதன் முக்கிய பாகம். எனவே பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு Inditrade Capital, நிறுவனத்தின் சுதிப் பந்தியோபாத்யாய் அளித்துள்ள விளக்கத்தை விரிவாக காணலாம்.
சுதிப்பை பொறுத்தவரை பேட்டரி நிறுவனங்களை சார்ந்த பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்கிறார். பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் அந்த பங்குகள் நல்ல லாபம் தரும் என்ற பார்வையை அவர் முன்வைத்துள்ளார்.

பாரம்பரிய வாகனங்களில் பேட்டரி என்பது ஒரு பாகம் ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரை பேட்டரிகள் தான் முக்கியமான பாகம். எனவே தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடும் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இந்த வாய்ப்பை முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இனி வரும் நாட்களில் பேட்டரிகளுக்கான தேவை இந்தியாவில் அதிகரிக்கும் இதன் காரணமாக பேட்டரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் பாசிட்டிவாக இருக்கும் என கூறுகிறார். இந்த துறை சார்ந்த பங்குகளை நிச்சயம் வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக அமர ராஜா (amara raja ) மற்றும் எக்சைட் (exide) ஆகிய இரண்டு நிறுவனங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அமரராஜா பேட்டரி நிறுவனம் ஸ்லோவாக்கியா நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி தொழில்நுட்பம் சார்ந்த புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருப்பதால் அந்த நிறுவனத்தின் பங்கு கணிசமான வளர்ச்சியை கண்டு வருகிறது , முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
அமர ராஜா பேட்டரி நிறுவனத்தை பொறுத்தவரை ஆந்திராவை சேர்ந்த நிறுவனம் மற்றும் பேட்டரி உற்பத்தியில் ஈடுபட்டிருப்பது ஆக இரண்டு காரணிகளால் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணிசமாக உயர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதன் ஒரு பங்கின் மதிப்பு 35% வரை அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் 161% உயர்ந்துள்ளது. ஜூன் 26 ஆம் தேதி பங்குச் சந்தையில் அமரராஜா எனர்ஜி நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 1669 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது, இந்த நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் ஆண்டில் 10,480 கோடி ரூபாயாகவும் லாபம் 695 கோடி ரூபாயாகவும் உள்ளது. இந்த நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 24 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். உள்நாட்டு நிறுவனங்கள் 10 சதவீத பங்கினை வைத்துள்ளன.
அதேபோல எக்சைட் நிறுவனத்தின் மதிப்பும் கடந்த ஓராண்டில் 141% என உயர்வு கண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது ஜூன் 26 ஆம் தேதி பங்குச்சந்தையில் 568 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் பங்குகளில் 13 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கின்றனர். உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 5.34% பங்குகளை வைத்துள்ளன. இத்துறை பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருந்தாலும் over valued என கூற முடியாது fully valued என கூறலாம் என்றும் சுதிப் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications