வெளிநாட்டு கஜானாக்களில் தங்கம் சேமிக்கப்படுவது ஏன் தெரியுமா? அட இது தெரியாம போச்சே!

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளிநாட்டு கஜானாக்களிலும் தங்க கையிருப்பை வைத்திருப்பது ஏன் என்று பலருக்குக் கேள்வி எழுவதுண்டு. உண்மையில், இந்தியாவின் தங்கக் கையிருப்பு பெரும்பாலும் நாட்டின் சொந்த கஜானாக்களிலேயே இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பகுதி வெளிநாட்டு கஜானாக்களிலும் சேமிக்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அதற்கான காரணங்களை விவரிக்கிறது இந்தப் பதிவு.

டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி 1991ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி நெருக்கடியை சந்தித்த பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட அளவு தங்க கையிருப்பை வெளிநாட்டு கஜானாக்களிலிருந்து இந்தியாவிற்கு நகர்த்தியது. அதேபோல தற்பொழுதும் சுமார் 100 டன் தங்கத்தை UK-விலிருந்து இந்தியாவிற்கு மாற்றியுள்ளது. மேலும் வரும் மாதங்களில் இன்னும் அதிகமான தங்கத்தை நகர்த்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 வெளிநாட்டு கஜானாக்களில் தங்கம் சேமிக்கப்படுவது ஏன் தெரியுமா? அட இது தெரியாம போச்சே!

ரிசர்வ் வங்கி ஏன் தங்கம் கையிருப்பை வெளிநாடுகளில் வைத்திருக்கிறது தெரியுமா?:

மத்திய வங்கிகள் பல காரணங்களுக்காக தங்க இருப்பை அதிகரிக்கின்றன. தங்கம், குறிப்பாக பொருளாதார நிச்சயமற்ற நிலைகளின் போது, ​​நிலையான சேமிப்பாக செயல்படுகிறது. மேலும், தங்கத்தை உடனடியாக பணமாக மாற்றலாம், இது தேசிய நிதிகளை நிர்வகிப்பதற்கு முக்கியமான ஒன்று.

பன்முகப்படுத்தப்பட்ட சேமிப்பு: முதலில், பல்வகைப்படுத்தப்பட்ட சேமிப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு கஜானாக்களைப் பயன்படுத்துகிறது ரிசர்வ் வங்கி. இயற்கை பேரிடர் அல்லது போர் போன்ற சவால்கள் ஏற்பட்டால், இந்தியாவில் உள்ள தங்கம் பாதிக்கப்படாமல் இருப்பதை இது உறுதி செய்கிறது.

சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குதல்: இரண்டாவதாக, சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு வெளிநாட்டு கஜானாக்களில் தங்கம் இருப்பது உதவுகிறது. இந்த தங்கத்தை விரைவாக விற்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியும். இது அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளுக்கும் உதவுகிறது.

எதிர்கால தேவைகள்: மூன்றாவதாக, எதிர்கால தேவைகளுக்காக வெளிநாட்டு கஜானாக்களில் தங்கத்தை வைத்திருப்பது அவசியம். உதாரணமாக, போர் அல்லது பொருளாதார நெருக்கடியின் போது, இந்த தங்கத்தை விரைவாக விற்க முடியும்.

பாதுகாப்பு காரணங்கள்: வெளிநாட்டு கஜானாக்கள் பொதுவாக மிக உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இதுவும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் தங்க இருப்பு: 2024ஆம் நிதியாண்டுக்கான RBI அறிக்கையின்படி, இந்தியா உள்நாட்டில் 308 மெட்ரிக் டன் தங்கத்தை வைத்திருக்கிறது, மேலும் 100.28 டன்கள் வங்கித் துறையின் சொத்தாக உள்நாட்டில் வைத்திருக்கிறது. மொத்தம் 413.79 மெட்ரிக் டன் தங்கம் வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உள்ள தங்கம் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள உயர் பாதுகாப்பு பெட்டகங்களில் சேமிக்கப்படுகிறது.

முக்கிய சர்வதேச கோல்டு வால்ட் (Vault):

பாங்க் ஆஃப் இங்கிலாந்து: பாங்க் ஆஃப் இங்கிலாந்து தங்க இருப்புக்களின் முக்கிய பாதுகாவலராக உள்ளது, மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குகிறது. இங்கிலாந்துடனான இந்தியாவின் நல்லுறவு காரணமாக தங்கத்தை சேமிப்பதற்கான விருப்பமான இடமாக உள்ளது.

பேங்க் ஃபார் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட் (BIS): சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் அமைந்துள்ள BIS, சர்வதேச நாணய சேவைகளை எளிதாக்குகிறது. இது மத்திய வங்கிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு பிரத்தியேகமாக வங்கி சேவைகளை வழங்குகிறது. தங்க இருப்புக்களின் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.

மற்ற முக்கிய வால்ட்-கள்:

ஃபோர்ட் நாக்ஸ் (அமெரிக்கா): திடமான கிரானைட் சுற்றளவு, அலாரங்கள், ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்துடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. இங்கும் அதிக அளவில் தங்கம் சேமிக்கப்படுகின்றன.

நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கி (அமெரிக்கா): மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் அமைந்துள்ளது. முக்கியமான தங்க இருப்பு வங்கிகளில் இதுவும் ஒன்று.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+