இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலமும், அதிகளவிலான வங்கி மோசடி காரணமாகவும் இந்திய வங்கிகளில் வாராக் கடன் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த வாராக் கடன்களுக்கு விரைவாகத் தீர்வு காணவும், அதேவேளையில் பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை மற்றும் கணக்குப் புத்தகங்களை மேம்படுத்தவும் கடந்த பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் வாராக் கடன் வங்கி என அமைப்பை அறிவித்தார்.
இந்த வாராக் கடன் வங்கியாக விளங்கும் National Asset Reconstruction Company Ltd (NARCL) ஜூலை மாதமே நிறுவப்பட்டாலும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து இன்னமும் உரிமம் பெறவில்லை.
30,600 கோடி ரூபாய் உத்தரவாதம்
இந்த நிலையில் தான் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இந்த வாராக் கடன் வங்கிக்கு 30,600 கோடி ரூபாய் அளவிலான செக்யூரிட்டி ரெசிப்ட் வாயிலாக உத்தரவாதம் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உத்தரவாதம் அடுத்த 5 ஆண்டுக் காலம் வரையில் மட்டுமே அளிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
செக்யூரிட்டி ரெசிப்ட் என்றால் என்ன..?
வங்கிகளிடம் இருந்து வாராக் கடனை NARCL அமைப்பு வாங்கும் போது அதற்குச் செக்யூரிட்டி ரெசிப்ட் வாயிலாக அரசு உத்தரவாதம் கொடுக்கும். NARCL அமைப்பு அந்த வாரக் கடனை முறையாக ஆய்வு செய்து சந்தையில் விற்பனை செய்ய நிதி திரட்டி வாராக் கடன் பாதிப்பைக் குறைக்க முடியும்.
5 வருடம் மட்டும் ஏன்..?
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள திட்டத்தின் படி NARCL அமைப்புக்கு 5 வருடத்திற்கு மட்டுமே கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் நிலையில், 5 வருடத்திற்குப் பின்பு இந்த அமைப்பு வெற்றிகரமாக இயங்கவில்லை என்றால் மூடப்பட வாய்ப்பு உள்ளது.
வங்கிகளே போதும்..
இதற்கு முக்கியக் காரணம் வங்கிகளிடம் இருக்கும் வாராக் கடன் சொத்துக்களை விற்பனை செய்ய முடிந்தால் வங்கிகளே கட்டாயம் விற்பனை செய்திருக்க முடியும், ஏற்கனவே பல நிறுவன கடன்களையும், சொத்துக்களையும் வங்கிகள் விற்பனை செய்துள்ளது.
NARCL அமைப்பு எதற்காக
இந்த NARCL அமைப்பு மூலம் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடனை ஒன்று திரட்டவும், பணிகளை வேகப்படுத்த முடியும், ஆனால் 5 வருடத்தில் இதற்குத் தீர்வு காண முடியுமா என்றால் அது கட்டாயம் மிகப்பெரிய கேள்வி தான்.
22 பெரிய வாராக் கடன்
NARCL அமைப்பு முதல் கட்டமாக 22 பெரிய வாராக் கடன் கணக்குகளுக்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு மட்டும் 89,000 கோடி ரூபாய். மேலும் NARCL அமைப்பு உரிமம் பெற வங்கிகள் அமைப்பு ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
20 சதவீதம் மட்டுமே
இந்த 89,000 கோடி ரூபாய் வாராக் கடனில் NARCL அமைப்பு மூலம் எந்த அளவிற்குப் பணத்தைத் திரும்பப் பெற முடியும் என CNBC தொலைக்காட்சியில் சந்தை வல்லுநர்களிடம் கேட்ட போது 15 முதல் 20 சதவீதம் எனக் கூறினர். ஆனால் அரசு இதைவிடவும் அதிகமாகத் தொகையை வசூலிக்க முடியும் என நம்புகிறது.
5 வருடத்திற்குப் பின்பு
இந்தத் திட்டம் சாத்தியமாகாத பட்சத்தில் NARCL அமைப்பு 5 வருடத்திற்குப் பின்பு மூடப்பட்டு, வங்கிகளிடம் இருந்து NARCL அமைப்பு கைப்பற்றிய சொத்துகளைக் கலைக்க வேண்டிய நிலை வரும்.
ரூ.6,000 கோடி முதலீடு
NARCL அமைப்பு ஜூலை மாதம் மும்பையில் நிறுவப்பட்டு, 8 பொதுத்துறை வங்கிகள் பங்குகளைப் பெற உள்ளது மட்டும் அல்லாமல் சுமார் 6000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த NARCL அமைப்பு அல்லது வாராக் கடன் வங்கி அமைக்கப்பட உள்ளது.
வெற்றி பெறுமா..?
இந்திய வங்கிகளில் இருக்கும் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வாராக் கடனை NARCL அமைப்பிற்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவை அனைத்தும் ரிசர்வ் வங்கி உரிமம் கொடுத்து முதல் வாராக் கடன் சொத்துக்குத் தீர்வு காணும் போது தான் இந்த NARCL கட்டமைப்பின் வெற்றி உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications