உலகளவில் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் மத்திய வங்கிகள்.. என்ன காரணம் தெரியுமா..?

உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தை குவித்து வருகின்றன. தொடர்ந்து 3-வது ஆண்டாக 1,000 டன்களுக்கும் அதிகமாக தங்கம் சேர்க்கப்படுவதாக, ஜூன் 17ஆம் தேதியான நேற்று வெளியிடப்பட்ட 2025 மத்திய வங்கி தங்க இருப்பு (CBGR) கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய தசாப்தத்தில் சராசரியாக ஆண்டுக்கு 400-500 டன்கள் கொள்முதல் செய்யப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

உலகளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்கம் கடந்த 2009ஆம் ஆண்டில் 26,000 டன்னாக இருந்தது, 2024ஆம் ஆண்டில் 32,000 டன்னாக அதிகரித்தது. அந்த வகையில், கடந்த 4 மாதங்களில் மட்டும் மத்திய வங்கிகள் இரண்டரை டன்னுக்கு மேல் தங்கம் வாங்கி உள்ளனர். இந்தியா உள்பட உலகின் டாப் 10 மத்திய வங்கிகள் இதில் பெரும்பகுதியை வைத்துள்ளன. அந்த அதன்படி பார்த்தால் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தான் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது.

உலகளவில் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் மத்திய வங்கிகள்.. என்ன காரணம் தெரியுமா..?

பிப்ரவரி 25 முதல் மே 20ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 73 மத்திய வங்கிகள் பங்கேற்றன. இந்த ஆய்வின்படி, பதிலளித்தவர்களில் 95% பேர் அடுத்த 12 மாதங்களில் உலகளாவிய மத்திய வங்கியில் தங்கத்தின் இருப்பு அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். 43% பேர் இதே காலகட்டத்தில் தங்கள் சொந்த தங்க இருப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். இது தங்கத்தின் மீதான புள்ளி விவரங்களில் ஒரு புதிய உச்சத்தைக் குறிக்கிறது.

தங்கத்தை இருப்பு வைக்க என்ன காரணம்?: தங்க இருப்புக்களை பராமரிப்பதற்கான முக்கிய காரணங்கள், அதன் மதிப்புப் பாதுகாப்புத் திறன்கள் (80 சதவீதம்), போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தல் நன்மைகள் (81 சதவீதம்) மற்றும் சவாலான காலங்களில் நம்பகமான செயல்திறன் (85 சதவீதம்) ஆகியவை ஆகும்.

உலகளவில் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் மத்திய வங்கிகள்.. என்ன காரணம் தெரியுமா..?

CBGR 2025 இன் படி, பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு பேர் அடுத்த 5 ஆண்டுகளில் உலகளாவிய அந்நிய செலாவணி இருப்புக்களுக்குள் அமெரிக்க டாலர் கையிருப்பில் மிதமான சரிவை எதிர்பார்க்கின்றனர். இதற்கு நேர்மாறாக, யூரோ, சீனாவின் ரென்மின்பி மற்றும் தங்கத்திற்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கமும் அமெரிக்க டாலரும் பொதுவாக ஒரு தலைகீழ் உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. டாலர் பலவீனமடையும் போது, ​​தங்கத்தின் விலைகள் உயரும். ஏனெனில், தங்கம் மற்ற நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு மலிவாகவும், மதிப்புக் கடையாக மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாறும்.

புவிசார் அரசியல் பாதுகாப்பிற்காக தங்கம்?: மத்திய வங்கிகள் தங்கத்தை மதிப்புக் கிடங்காகவோ அல்லது பணவீக்க ஹெட்ஜாகவோ மட்டுமின்றி, புவிசார் அரசியல் ஹெட்ஜாகவும் பார்க்கின்றன. கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதாலும், உலகளாவிய வட்டி விகிதப் பாதைகள் வேறுபட்டு வருவதாலும், தங்கத்தின் நடுநிலைமை மற்றும் நெருக்கடி மீள்தன்மை ஆகியவை அதை இருப்புச் சொத்தாக மாற்றுகின்றன. இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 43% பேர், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக வரும் 12 மாதங்களில் தங்கள் சொந்த தங்க இருப்புக்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

உலகளவில் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் மத்திய வங்கிகள்.. என்ன காரணம் தெரியுமா..?

தங்கத்தை வாங்கிக் குவிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி: தங்கம் வாங்குவதை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாளுக்கு நாள் உயர்த்தி வருவதாக கூறப்படுகிறது. 2024-25ஆம் நிதியாண்டில் மட்டும் 57.5 டன் தங்கத்தை இந்தியா வாங்கியுள்ளது. இது கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு 2-வது அதிகபட்ச வருடாந்திர கொள்முதல் ஆகும். உலக அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வரும் நிலையில், சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால், பல நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில், இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 35% அதிகரித்து, மார்ச் 2025இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது. தங்க இருப்பு அடிப்படையில் உலகில் 7-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+