டெல்லி: இந்தியாவில் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு பிரீமியம் தொகைகளுக்கான ஜிஎஸ்டி எப்போது குறைக்கப்படும் என மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதில் அளித்துள்ளார.
இந்தியாவில் தற்போது காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகை மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால் பாலிசிதாரர்கள் செலுத்தக்கூடிய பிரீமியம் தொகை கணிசமான அளவு குறையும். இதனிடையே ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

அதில் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியை குறைப்பது அல்லது விலக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள பதிமூன்று பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் நியமனம் செய்துள்ளது என தெரிவித்துள்ளார். இந்த குழு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் , 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மருத்துவ காப்பீட்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளதாம்.
அதுமட்டுமின்றி ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு பிரீமியம் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டிக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக்கொண்டால் ஜிஎஸ்டி வரிவிகித மாற்றங்கள் அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
காப்பீட்டு திட்டங்களை பொறுத்தவரை இறுதியில் மொத்த தொகைக்கு தான் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. எனவே ஜிஎஸ்டி தொடர்பாக எந்த ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டாலும் நேரடியாக பாலிசிதாரர்களுக்கு தான் அதன் பலன்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன் இதன் மூலம் மக்கள் செலுத்தக்கூடிய பிரீமியம் தொகை குறையும் என தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 21ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற இருக்கிறது. அப்பொழுது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறித்து அமைச்சர்கள் குழு வழங்கிய பரிந்துரை தொடர்பாக விவாதிக்கப்படும். அந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டியை குறைப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications