இந்தியாவில் பெண்கள் மொத்த மக்கள் தொகையில் 48% இருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி-யில் (GDP) அவர்களின் பங்கு 18% மட்டுமே என்று தேசியக் குடும்பக் கணக்கெடுப்பு ஆய்வு (National Family Health Survey) தெரிவிக்கிறது.
பெண்களின் வேலைவாய்ப்பில் நிலவும் பாலின வேறுபாட்டைக் குறைப்பதன் மூலம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி-யில் பெண்களின் பங்கீட்டை 30% வரை உயர்த்த முடியும் என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட் (MGI) நடத்திய மற்றொரு ஆய்வின்படி, உலகளவில் வேலைவாய்ப்பு, அதிகாரம் என அனைத்திலும் ஆண்கள் - பெண்கள் சமத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி-யில் சுமார் 28 டிரில்லியன் டாலர்கள் கூடுதலாக அதிகரிக்க முடியும் என கூறியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்கள் - பெண்கள் சமத்துவத்தை மேம்படுத்தினால் 2025ஆம் ஆண்டுக்குள், ஆண்டு வருமானமாக 770 பில்லியன் டாலர் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இது தற்போதைய வர்த்தக வருமானத்தைக் காட்டிலும் 18% அதிகமாகும்
2023 ஆம் ஆண்டில், வேலை செய்யக்கூடிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 53% பெண்கள் உள்ளனர். உலக அளவில் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் எகோசிஸ்டத்தை கொண்டிருக்கும் இந்தியாவில் வெறும் 10% ஸ்டார்ட்-அப்களில் மட்டுமே பெண் நிறுவனர்கள் தலைமை தாங்குகின்றனர்.
பாலின சமத்துவம் மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் பல ஆய்வுகள், "Empower Her" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட காபி டேபிள் புத்தக வெளியீட்டு விழாவின் போது கவனத்தைப் பெற்றது.
உலகளவில், 65% பெண்கள் சமூக-கலாச்சார தடைகள் காரணமாக முறையான வங்கி சேவையை அணுகுவதில் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர். இது ஆண்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கூறுகிறது. மறுபுறம், உலகளவில் 72% ஆண்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்திருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மற்றொரு அறிக்கையின்படி, தொழில்துறைகளில் பணிபுரியும் 88% பெண்கள் முறைசாரா துறையில் பணியாற்றி வருகின்றனர். கூடுதலாக, சேவைத் துறையில் பணிபுரியும் பெண்களில் 7% முறைசாரா பணியாளர்களை சேர்ந்தவர்கள் என புள்ளிவிவரம் கூறுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications