டெல்லி: மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதை மட்டும் செய்து விடாதீர்கள் என உலக தங்க கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் சனிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை தான். இந்நிலையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டால் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என உலக தங்க கவுன்சில் கூறுகிறது.

உலக தங்க கவுன்சிலின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரக்கூடிய சச்சின் ஜெயின் மத்திய அரசு 2025 - 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்த கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
ஒருவேளை மத்திய அரசு தங்கத்தின் மீதான வரியை உயர்த்தினால் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக தங்கத் கடத்தலுக்கு வித்திடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது தவிர உள்நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தார். இதனால் உள்நாட்டில் தங்கத்தின் விலை சற்றே குறைந்தது. ஆனால் சர்வதேச காரணிகள் காரணமாக தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக அதிகரித்து விட்டது. இருந்தாலும் இறக்குமதி வரி குறைந்ததன் காரணமாக இந்தியாவில் தங்கம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைந்து வந்தன என கூறும் சச்சின் ஜெயின் மத்திய அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய ஜிடிபி -யில் தங்கம் சார்ந்த துறை 1.3% பங்களிப்பை தருகிறது. நாட்டில் சுமார் 20 முதல் 30 லட்சம் பேர் தங்கம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை மாதம் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதுதான் இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைத்தார்.
இதனால் நாட்டில் முறைகேடாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவது தடுக்கப்பட்டது என்றும் உள்நாட்டில் மக்கள் தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்தது என்றும் உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
இருந்தாலும் மத்திய அரசு என்ன நோக்கத்திற்காக தங்கத்தின் விலையை குறைத்ததோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை எனவே அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அவ்வாறு அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தினால் உள்நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications