யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு டெல்லி உயர் நீதிமன்றம், யெஸ் வங்கிக்கு சுமார் 466.51 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வரும் பணச் சலவை வழக்கில் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
ராணா கபூர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி சுதிர் குமார் ஜெயின் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
மோசடி குற்றச்சாட்டு
2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கவுதம் தாபர், அவன்தா ரியாலிட்டி லிமிடெட், ஒய்ஸ்டர் பில்ட்வெல் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற தரப்பினர் மீது நம்பிக்கை மீறல், ஏமாற்றுதல், கிரிமினல் சதி மற்றும் பொதுப் பணத்தைத் திருடி, முறைகேடாகப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
யெஸ் வங்கி
இந்த மோசடி மூலம் யெஸ் வங்கிக்கு 466.51 கோடி ரூபாய் அளவிலான இழப்பு ஏற்பட்டதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு முன்பு நீதிமன்ற விசாரணையில் ராணா கபூருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
15 பேருக்கும் ஜாமீன்
இந்தத் தீர்ப்பின் போது இவ்வழக்கை விசாரணை செய்த சிறப்பு நீதிபதி கபூருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையானவை மற்றும் தீவிரமானவை என்று அறிவித்த காரணத்தால் ஜாமீன் மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
அமலாக்க இயக்குநரகம்
நீதிமன்ற விசாரணையின் போது, ராணா கபூர்-ன் ஜாமீன் மனுவுக்கு அமலாக்க இயக்குநரகம் கடுமையாக எதிர்த்தது மட்டும் அல்லாமல் இந்த மோசடிக்கு முக்கிய மற்றும் அடிப்படை காரணம் ராணா கபூர் என்பதால் இவருக்கு ஜாமீன் வழங்க கூடாது எனத் தெரிவித்தது.
ராணா கபூர் தரப்பு வாதம்
ஆனால் விசாரணையின் போது ராணா கபூர்-ஐ அமலாக்க இயக்குநரகம் கைது செய்யப்படவில்லை என்றும், குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவரைக் காவலில் அனுப்புவதற்கு எந்த நோக்கமும் இல்லை என்றும் ராணா கபூர் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் மனு
ஜாமீன் மனுவை நிராகரித்த சிறப்பு நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி கெளதம் தாப்பர் அல்லது ராணா கபூர் ஆகியோரிடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று சில தவறுகளைச் செய்ததாகத் தெரிகிறது.
DHFL கடன் மோசடி
இந்திய வங்கிகளில் தொடர்ந்து கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது யெஸ் வங்கி DHFL கடன் மோசடி வழக்கு மிகப்பெரியதாக வெடித்துள்ளது. யெஸ் வங்கி - டிஎச்எஃப்எல் 3700 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.3,700 கோடி கடன்
சில ஆண்டுகளுக்கு முன்பு, ராணா கபூர் தலைமையிலான யெஸ் வங்கியில் இருந்து டிஎச்எஃப்எல் பெற்ற ரூ.3,700 கோடியில் கணிசமான பகுதி ரேடியஸ் குழுமத்திற்குத் திருப்பி விடப்பட்டதைச் சிபிஐ அறிந்தது. இது தொடர்பான விசாரணையில் இக்கடன் தொகையைப் பல்வேறு வகையில் மோசடி செய்தது மட்டும் அல்லாமல் ரூ.600 கோடி கடனை கிக்பேக்-காகத் தனது மகள்கள் நிறுவனமான DOIT அர்பன் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்குக் கடனாகப் வந்துள்ளதாகத் தகவல் வெளியானது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications