சென்னை: இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் பட்ஜெட்டுக்கு முன்பாகவே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,899.50க்கு விற்பனையாகி வருகிறது.
2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். மொத்த நாடும் பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்புகளை எதிர்நோக்கி காத்துள்ளது.
ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை வரி சலுகை, தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஆனால் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாகே கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகிறது.
அந்த வகையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ரூ.1,849.50க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர் ஒன்றின் விலை இன்று முதல் ரூ.1,899.50க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.160 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹோட்டல், தாபா, சாலையோர உணவகங்கள், வணிக வளாக ரெஸ்டாரண்ட்டுகளில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை வியாபாரிகள் பயன்படுத்தி வருகினறனர். இதனல் அவர்களுக்கு இந்த செய்தி ஷாக்காக அமைந்துள்ளது.
அதேபோல் டெல்லியில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.49 அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1,691.49 ல் இருந்து ரூ.1,740.50 ஆகவும், கொல்கத்தா மற்றும் மும்பையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.49.50 வரை உயர்ந்துள்ளது. இதனால் கொல்கத்தாவில் ஒரு சிலிண்டர் ரூ.1795ல் இருந்து ரூ.1,844.50 ஆகவும், மும்பையில் ரூ.1,642.50 ல் இருந்து ரூ.1,692 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
இருப்பினும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. இது இல்லத்தரசிகளுக்கு ஓரளவு நிம்மதியை தந்துள்ளது. அதேவேளையில் இன்றைய தினம் விமானங்களுக்கான எரிபொருளான விமான எரிபொருளான ஏடிஎஃப்-இன் விலைகள் அதிரடியாக குறைந்துள்ளன.
டெல்லியில், ஒரு கிலோலிட்டர் ஏடிஎஃப்-இன் விலை முந்தைய 778.85 டாலரில் இருந்து 778.85 டாலராக குறைந்துள்ளது. இதனால் இந்திய ரூபாயில், 1,000 லிட்டர் ஏடிஎஃப்-இன் விலை இப்போது ரூ. 91,393.39 ஆக இருக்கும், இது முந்தைய விலை ரூ. 92,323.02 உடன் ஒப்பிடும்போது குறைவாகும் சென்னையிலும் ஒரு கிலோலிட்டர் 774.26 டாலராக (இந்திய மதிப்பில் ரூ.84,781.99) ஆக இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Oneindia
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications