ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வரும் புத்தாண்டு முதல் தனது வாகனங்களுக்கனா விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்படி வரும் ஜனவரி மாதத்திற்கு பிறகு நீங்கள் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கினால் அதிக பணம் செலவு செய்ய வேண்டியது வரும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஏத்தர் எனர்ஜி இந்நிறுவனம் வரும் ஜனவரி 1ம் தலை முறதல் தனது வாகனங்களுக்கான விலையில் ரூ3,000 வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. வாகனத்தை தயாரிப்பதற்கு ஆகும் செலவு, மற்றும் அந்நிய செலாவணியில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இறங்கி வருவதன் எதிரொலியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முக்கியமான உதிரிபாக விலைஉயர்வு, இந்த விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த டிசம்பர் மாத மத்தியில் 91.01 ஆக இருந்தது.
தற்போது ஏத்தர் நிறுவனம் தனது ரிஸ்டா எஸ் என்ற என்ட்ரி லெவல் ஸ்கூட்டர் ரூ1,04,999 என்ற விலையில் விற்பனையாகி வரகிறது. இது ரூ1,07,999 என்ற விலையில் விற்பனையாகும். டாப் வேரயின்டான 450 அப்பெக்ஸ் வாகனம் தற்போது ரூ1,89,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது ஜனவரி 1ம் தேதி முதல் ரூ1,92,999 என்ற விலையில் விற்பனைக்கு வரும்.

ஆனால் டிசம்பர் மாதம் இந்த வண்டியை வாங்கினால் தற்போது உள்ள விலையிலேயே வாங்க முடியம் இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் டிசம்பர் என்ற புரோகிராமை நடத்தி வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நகரங்களில் வாகனம் வாங்குபவர்களுக்கு ரூ20,000 வரையிலான பலன்கள் வழங்கப்படும்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த சில மாதங்களாக சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. இந்நிறுவனம் மிக அதிக அளவில் வாகனங்களில் விற்பவனை செய்ய துவங்கிவிட்டன. என்னதான் பிரமியம் ரக வாகனகமாக தனது பிராண்டை ஆரம்பித்தாலும் மக்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பு தரம் காரணமாக இதை வாங்க துவங்கிவிட்டனர்.

தற்போது ஏத்தர் நிறுவனம் தனது ரிஸ்டா எஸ் என்ற என்ட்ரி லெவல் ஸ்கூட்டர் ரூ1,04,999 என்ற விலையில் விற்பனையாகி வரகிறது. இது ரூ1,07,999 என்ற விலையில் விற்பனையாகும். டாப் வேரயின்டான 450 அப்பெக்ஸ் வாகனம் தற்போது ரூ1,89,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது ஜனவரி 1ம் தேதி முதல் ரூ1,92,999 என்ற விலையில் விற்பனைக்கு வரும்.
ஆனால் டிசம்பர் மாதம் இந்த வண்டியை வாங்கினால் தற்போது உள்ள விலையிலேயே வாங்க முடியம் இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் டிசம்பர் என்ற புரோகிராமை நடத்தி வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நகரங்களில் வாகனம் வாங்குபவர்களுக்கு ரூ20,000 வரையிலான பலன்கள் வழங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் நிறுவனம் குடும்பத்துடன் பயணிக்கும் ரக வாகனத்தை தயாரிக்க துவங்கிய பிறகு ஏகப்பட்ட விற்பனை நடந்து வருகிறது. தற்போது விலையேற்றம் என்றாலும் இதுபெரிய அளவில் இல்லை என்பதால் இதுவிற்பனையை பெரிய அளவில் பாதிக்காது என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
Credit: Drivespark
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications