யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் () ஆனது ஆதார் அட்டை தொடர்பான விதிகளில் (Aadhaar Card Rules) சில பெரிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த மாற்றங்கள் - குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை பாதிக்க உள்ளது.
இதுவரை, ஆதார் சேர்க்கைக்கு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பிறப்பு சான்றிதழ் (Birth Certificate) கட்டாயமாக இருந்தது. கூடிய விரைவில் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளின் ஆதார் சேர்க்கைக்குமே பிறப்பு சான்றிதழ் ஆனது கட்டாயமாகலாம் என்பது போல் தெரிகிறது.

யுஐடிஏஐ ஏன் இந்த திடீர் மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறது? ராய்ப்பூரில் நடந்த ஒரு வொர்க்ஷாப்பில் பேசிய யுஐடிஏஐ-யின் தலைமை நிர்வாக அதிகாரி (UIDAI CEO) ஆன புவனேஷ் குமார், இந்தியாவில் தினமும் சுமார் 75,000 புதிய ஆதார் விண்ணப்பங்கள் பெறுவதாக தெரிவித்தார்.
ஆச்சரியப்படும் விதமாக, இவற்றில் 98% ஆனது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இருந்து வருகின்றன. அதாவது புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் பெரியவர்களின் எண்ணிக்கை வெறும் 2% மட்டுமே உள்ளது. இந்த "மாற்றம்" கடுமையான ஆதார் சரிபார்ப்பு விதிமுறைகளை (Aadhaar Verification norms) தூண்டி உள்ளது.
இதன் விளைவாக குழந்தைகளுக்கான பெயர் மாற்றங்களை சுற்றியுள்ள ஆதார் விதிகளை கடுமையாக்க யுஐடிஏஐ திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் பிறப்பு சான்றிதழின் படி மட்டுமே எந்தவொரு பெயரும் புதுப்பிக்கப்பட அனுமதிக்கப்படும். அதாவது பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் ஆதார் பதிவுகளுக்கு இறுதியானதாக இருக்கும் - இது பிழைகள், தவறான பயன்பாடு மற்றும் அடையாள மோசடியைக் குறைக்கும்.
பிறந்த தேதி ஒருமுறை மட்டுமே: முகவரி மற்றும் மொபைல் எண் புதுப்பிப்புகள் தான் ஆதார் மாற்றங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. மக்கள் அடிக்கடி மொபைல் எண்களை மாற்றுகின்றன. யுஐடிஏஐ ஆனது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 23 கோடி புதுப்பிப்பு கோரிக்கைகளை பெறுகிறது. அதாவது இந்த எண்ணிக்கை தினமும் கிட்டத்தட்ட 7.5 லட்சம் புதுப்பிப்புகளை பெறுவதற்கு சமம். இருப்பினும், பிறந்த தேதியை ஒருவர் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.
போலி ஆதார் அட்டைகளை நிறுத்த ஏஐ: போலி ஆதார் உருவாக்கத்தைத் தடுக்க, யுஐடிஏஐ ஆனது ஏஐ (AI) மற்றும் மெஷின் லேர்னிங்கை (Machine Learning) பயன்படுத்துகிறது. வலுவான பயோமெட்ரிக் சோதனைகள் ஒரு நபர் பல ஆதார் அட்டைகளை பெற முடியாது என்பதை உறுதி செய்கின்றன. பெரிய அளவிலான பெயர் மாற்றங்களுக்கு இப்போது கஸாட் நோட்டிபிகேஷன் (Gazette notification) தேவைப்படுகிறது, இது அடையாளம் தவறாக பயன்படுத்தப்படுவதை கடினமாக்குகிறது.
மேலும் யுஐடிஏஐ ஆனது பிஸிக்கல் ஆவணங்களிலிருந்து ஆன்லைன் சரிபார்ப்பை நோக்கி நகர்கிறது. பல மாநிலங்களின் பிறப்புச் சான்றிதழ் தரவு ஏற்கனவே ஆதார் அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. வேகமான மற்றும் துல்லியமான சரிபார்ப்புக்காக சிபிஎஸ்இ (CBSE) மதிப்பெண் பட்டியல்கள், பான் (PAN) அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்கள் போன்ற தரவுத்தளங்களும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
அக்டோபர் மாதத்திற்குள், 1 லட்சம் ஆதார் மையங்களில் புதிய மென்பொருள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது க்யூஆர்-குறியீடு அடிப்படையிலான ஆவண ஸ்கேனிங் மூலம் போலி ஆவணங்களை உடனடியாக கண்டறிய உதவும். மேலும் முக அங்கீகாரம் போன்ற அம்சங்கள் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தே சரிபார்ப்பை முடிக்க அனுமதிக்கும்.
மேற்கண்ட ஆதார் தொடர்பான விதிகள் கடுமையாகத் தோன்றினாலும், இந்த மாற்றங்கள் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நீண்ட கால ஸ்டோரேஜிற்கு இன்றியமையாதவை என்று யுஐடிஏஐ கூறுகிறது, ஆதார் அடிப்படையிலான நேரடி மானியம் ஆனது அரசாங்கத்திற்கு அதன் இயக்கச் செலவை விட 40 மடங்கு அதிகமாக சேமிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications