பொதுமக்கள் என்னதான் விழிப்புடன் இருந்தாலும், எளிதாக ஏமாற்றக்கூடிய புதிய வழிகளை ஏமாற்றுக்காரர்கள் தொடர்ந்து புதிது புதிதாக கண்டுபிடித்துத் தான் வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வாகன ஓட்டிகளைக் குறிவைத்து ஒரு புதிய வகை சைபர் மோசடி (Cyber Fraud) பரவி வருகிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது உங்கள் மொபைல் போனுக்கு போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, உடனே கட்டுங்கள் என்று ஒரு மெசேஜ் (எஸ்எம்எஸ்) வந்தால் அவசரப்பட்டு அதில் உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அது உங்கள் வங்கி கணக்கை சில நிமிடங்களில் காலி செய்வதற்கான ஒரு பொறியாக இருக்கலாம்.

சில மோசடி கும்பல்கள் அரசு இணையதளமான பரிவாஹன் (Parivahan) போன்று தோற்றமளிக்கும் போலியான இணையதளங்களை உருவாக்கி உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. குறிப்பாக உங்களுக்கு வரும் மெசேஜில் உள்ள லிங்க் பார்க்கும்போது உண்மையானது போன்ற இருக்கும். உதாரணமாக Prairvahsan எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். நீங்கள் உற்றுப் பார்த்தால் மட்டுமே அந்த எழுத்துப் பிழைகள் தெரியும். அதாவது நாம் அவசரத்தில் அதை கவனிக்காமல் கிளிக் செய்துவிடுவோம் என்று நம்பி தான் இது போன்ற போலி லிங்குகளை அனுப்புகின்றனர்.
அதுவும் இந்த போலி லிங்கை கிளிக் செய்தவுடன், அது உங்களை ஒரு இணையப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு அபராதம் போல நடித்து உங்கள் தனிப்பட்ட வாங்கி விவரங்கள், லாகின் ஐடி, பாஸ்ட்வேர்ட், கிரெடிட் கார்டு தகவல்களை எளிதாகத் திருடிவிடுவார்கள். அதேபோல் அவர்கள் அனுப்பும் அந்த போலி லிங்குகள் மூலம் உங்களது போனில் மால்வேர் தாக்கும் ஆபத்தும் உள்ளது. சரி இப்போது இது போன்ற போலி லிங்குகளை தொடாமல் உஷாராக இருப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
1.தெரியாத மொபைல் எண்ணில் இருந்து வரும் மிரட்டல் தோணியிலான மெசேஜ்களில் உள்ள லிங்குகளைத் தொடாதீர்கள்.
2.உங்களுக்கு உண்மையிலேயே அபராதம் இருக்கிறதா என்று சந்தேகம் வந்தால், அந்த லிங்க் வழியாகச் செல்லாமல், நேரடியாக கூகுளில் Parivahan அல்லது உங்கள் மாநில போக்குவரத்துத் துறை இணையதளத்திற்குச் சென்று உங்கள் வண்டி எண்ணைப் போட்டு சோதித்துப் பாருங்கள்.
3.ஒருவேளை மோசடி மெசேஜ்கள் வந்தால் உடனே அந்த எண்ணை யோசிக்காமல் பிளாக் (Block) செய்துவிட்டு, சைபர் கிரைம் பிரிவில் புகார் தருவது நல்லது.

குறிப்பாக போக்குவரத்து போலீஸ் அல்லது அரசுத் துறை ஒருபோதும் தனிப்பட்ட மொபைல் எண்களில் இருந்து அவசரமாகப் பணம் கட்டச் சொல்லி லிங்க் அனுப்பாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் சிறு கவனக்குறைவு பெரும் பணம் இழப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற போலி லிங்க் வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு ஒருவேளை இதுபோன்ற ஏதாவது ஒரு மோசடி நடந்தால் cybercrime.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று புகார் கொடுக்கலாம் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கலாம். குறிப்பாக உங்கள் போனுக்கு வரும் தேவையில்லாத எஸ்எம்எஸ் (மெசேஜ்) அல்லது மெயில்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக யுபிஐ (UPI) தரவுகள் அல்லது OTP-யை பகிர்வதைத் தவிர்க்கவும்.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications