மொத்தமா எல்லாமே மாறுது.. இனி இந்த 3 வகை வங்கி கணக்குகள் இருக்காது.. காரணம் என்ன? இதோ விவரம்..

இந்த 2026-ம் ஆண்டு பல முக்கிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதேபோல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சில முக்கிய மாற்றங்களை இந்த ஆண்டு அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட வகையை சேர்ந்த சில வங்கி கணக்குகள் (bank accounts ) மூடப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதுவும் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான கணக்குதாரர்களை இது பாதுகிக்ககூடும் என்பதால், இந்த புதிய விதிமுறைகளைப் புரிந்து கொண்டு முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும் இந்த புதிய முடிவின் நோக்கம், வங்கிகளை மேலும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றுவது தான்.


மொத்தமா எல்லாமே மாறுது.. இனி இந்த 3 வகை வங்கி கணக்குகள் இருக்காது..

குறிப்பாக நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத கணக்குகள், மோசடி, ஹேக்கிங், பண மோசடி போன்ற அபாயங்களுக்கு எளிதில் இலக்காகின்றன. தற்போது இதனைத் தடுக்கும் வகையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் வங்கி அமைப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் பண பாதுகாப்பை உறுதி செய்யவும் தான் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது.

1.டார்மன்ட் (Dormant) கணக்குகள்
பொதுவாக இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக எந்தவித பணப் பரிவர்த்தனையும் நடக்காத கணக்குகள் டார்மண்ட் கணக்குகள் என்று கருதப்படுகின்றன. இந்த வகை கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்படாமல், ஹேக்கர்களுக்கு எளிதான இலக்காக மாறுகின்றன என்று கூறப்படுகிறது. எனவே தான் இது போன்ற கணக்குகள் பயன்பாட்டில் இல்லாவிட்டால் மூடப்பட வாய்ப்பு அதிகம்.

2.இன் ஆக்டிவ் கணக்குகள் (Inactive Accounts)
அதாவது 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை இல்லாத கணக்குகள் தான் இன் ஆக்டிவ் கணக்குகள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இது போன்ற கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகம். எனவே தான் புதிய விதிகளின்படி, கணக்குதாரர் சிறிய பரிவர்த்தனை ஒன்றை செய்தால்கூட, அந்த கணக்கை மீண்டும் செயலில் வைக்க முடியும்.

3.ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் (Zero Balance Accounts)
ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் அதாவது நீண்ட காலமாகப் பணமில்லாமல் இருக்கும் கணக்குகள் மூடப்படலாம். குறிப்பாக இதன் மூலம் தவறான பயன்பாடுகளை குறைப்பதுடன் KYC விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை வங்கிகள் உறுதி செய்ய உதவும். ஆகவே வங்கி கணக்கு செயலியில் உள்ளதா என்பதை அனைவரும் சரிபார்த்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் நல்லது.

ஆதார் மற்றும் பான் கார்டு

மேலும் ஜனவரி 1-ம் தேதி முதல் உங்களது வங்கி மற்றும் அரசு சேவைகளுக்கு பான்-ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. குறிப்பாக பான் கார்டு (pan card) மற்றும் ஆதார் கார்டு (aadhaar card) இணைக்கப்படாவிட்டால் சேவைகள் மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.


மொத்தமா எல்லாமே மாறுது.. இனி இந்த 3 வகை வங்கி கணக்குகள் இருக்காது..

குறிப்பாக பான் எண் மட்டும் முடக்கப்பட்டால் உங்களால் வங்கி கணக்கைத் தொடங்க முடியாது. டீமேட் கணக்கையும் தொடங்க முடியாது. இதனால் நீங்கள் பங்குச் சந்தையிலோ அல்லது ஈடிஎப்ஃகளிலோ வர்த்தகம் செய்ய முடியாது. ரூ.50,000-க்கு மேல் நிலையான வைப்புத்தொகை வைத்திருக்கவும் பான் தேவைப்படுகிறது.

அதேபோல் அரசு முக்கிய திட்டங்கள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கும் பான் கணக்கு அவசியம் தேவைப்படுகிறது. பான் கார்டு இல்லாமல் எந்த நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும் பான் எண் இல்லாமல் வங்கிகளிடமிருந்தோ அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்தோ கடன் கூட பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Credit: Gizbot

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+