தங்கம் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் பலர் விலை குறையும், மதிப்புக் கூட்டப்பட்ட வரி செலுத்த தேவையில்லை என்ற காரணங்களுக்காக ரசீது பெறுவதில்லை. எனவே இப்போது 50,000 ரூபாய்க்கு அதிகமாகத் தங்கம் வாங்கினால் பான் எண் அளிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகளின் தந்திரம்
இருந்த போதிலும் பல தங்க நகை வியாபாரிகள் ரசீது வாங்கவில்லை என்றால் ஆஃபர்கள் அளித்து அரசையும் வாடிக்கையாளர்களையும் ஏமாற்றுகின்றார்கள்.
ரசீது இல்லை என்றால் நட்டம்?
குறைந்த காலத்திற்கு உங்களுக்கு இது லாபம் தருவதாக இருந்தாலும் நீண்ட காலத்தை பார்க்கும் போது பெறும் நட்டத்தை ஏற்படுத்தும்.
எதனால் நட்டம்?
தங்கம் வாங்கும் போது ஏதேனும் குளறுபடி நடந்து எடை குறைவாகவோ அல்லது ஏதேனும் வேறு தவறு நடந்து இருந்தாலோ நுகர்வோர் நீதிமன்றம் செல்ல ரசீது கட்டாயம் ஆகும்.
எதற்காக தங்கமும் ரசீதும்?
குடும்பத்தில் பண சிக்கல் ஏற்படும் போது உடனடியாக எளிதாகக் கடன் பெறத் தங்கம் உதவுகின்றது. இப்படித் தங்கத்தை அடைமானமாக, விற்க அல்லது மாற்று நகை வாங்க ரசீது இருந்தால் சரியான விலையில் பரிமாற்றம் முறையாக நடக்கும்.