டெல்லி: பார்க்கும் இணையதளங்களில் எல்லாம் ஆப்ஸ்களை டவுன்லோட் செய்பவர்களில் நீங்களும் ஒருவரா? அதேபோல ஆதார் விவரங்களை பிறருக்கு தருகிறீர்களா? இதன் மூலம் நீங்களே உங்களுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை பிறர் திருடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறீர்கள், என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய முக்கிய விவரங்களை வைத்து மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ள காரணத்தினால், இது போன்ற விஷயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிதி மோசடி உங்களுக்கு நடக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோர்களில் இருந்து மட்டுமே ஆப்களை டவுன்லோட் செய்யவும்: பல்வேறு இணையதளங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்ய முடியும். ஆனால் அவை அனைத்தும் நம்பகத்தன்மை உடையதாக இருக்குமா.. என்று நம்மால் நிச்சயமாக கூற முடியாது. ஏனெனில் மோசடிக்காரர்களின் யுத்திகளில் இதுவும் ஒன்றே. இது போன்ற காரணத்தினால், எப்போதும் ஆப்களைடவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் அங்கீகரிக்கப்பட்ட பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.

SMS மற்றும் மெயில்: நீங்கள் ஒரு பெரிய தொகையை வென்றதாகக் கூறி வரும் SMS மற்றும் மெயில் ஆகியவற்றை நம்ப வேண்டாம். ஏனெனில் இந்த உலகத்தில் எதுவும் இலவசம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற மெசேஜ் உங்களுக்கு வந்தால் யாரோ ஒருவர் உங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தொகையை தர வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.. இது ஒரு மோசடியாக இருக்கலாம்.
தெரியாத இடங்களில் இருந்து வரும் முதலீட்டு விருப்பங்கள்: தெரியாத இடங்களில் இருந்து பேசும் நபர்கள் உங்களை ஏதேனும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய சொன்னால், அது மோசடியாக இருக்கலாம் என்பதை உணருங்கள். உங்களுக்குத் தெரிந்த இடங்களில் மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, உங்களுடைய வங்கிகளில் FD திட்டங்கள், RD திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். அதேபோல, உங்களுடைய தனிப்பட்ட தகவலை ஒருபோதும் பிறரிடம் சொல்ல கூடாது.
வங்கி விவரங்கள்: வங்கி எப்போதும் உங்களுடைய பின் நம்பர் மற்றும் வங்கி விபரங்களை போன் செய்து கேட்காது என்பதை உணருங்கள். தேவை இன்றி வரும் அழைப்புகள் மற்றும் மெயில், மெசேஜ் போன்றவற்றிற்கு பதில் அளிப்பதன் மூலம் உங்களுடைய சுயவிவரத்தை பிறரிடம் கொடுத்து நீங்களே தானாக சென்ற அவர்களுடைய வலையில் சிக்குகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இப்போது முதலீடு என்ற பெயரில் பல நபர்களை ஏமாற்றி வருகின்றனர் அதில் உங்களை ஒரு சிறிய தொகையை முதலீடு செய்ய சொல்வார்கள். அதன் பிறகு அவற்றை இரட்டிப்பாக்கியது போல உங்களுக்கு ஸ்கிரீனில் காண்பித்து ஏமாற்றி, பிறகு பெரிய தொகையை முதலீடு செய்ய வைப்பார்கள். இதுவே அவர்களுடைய யுக்தி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பப்ளிக் வைஃபை பயன்படுத்த வேண்டாம்: கஃபே, ஹோட்டல், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் இலவச வைஃபை-யை பயன்படுத்தாமல் இருப்பது, உங்களுக்கு நிதி மோசடி ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. ஏனெனில் மோசடிக்காரர்கள் உண்மையான வைஃபை பெயருக்கு ஏற்ப போலியான பெயரில் உங்களுடைய தகவல்களை திருடுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications