மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது இரண்டாவது பட்ஜெட்டில் (2015) தங்க பத்திரம் திட்டத்தை (எஸ்ஜிபி) அறிவித்தார். தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதிலாக காகித வடிவத்தில் வாங்குவதாகும். இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
கடைசியாக 2024 பிப்ரவரியில் தங்க பத்திர வெளியீடு நடந்தது. அதன் பிறகு வெளியீடு நடைபெறவில்லை. இதனால் மத்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற முறையில் தங்க பத்திர திட்டத்தை ரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், அதிக செலவை காரணம் காட்டி, தங்க பத்திர திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

தங்க பத்திரம் ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பமாக கருதப்பட்டது. மேலும், தங்கத்தை பாதுகாக்க வேண்டிய கவலை இல்லாமல் முதலீட்டாளர்கள் அதனை டிஜிட்டல் வடிவத்தில் வைத்திருக்க முடியும். மேலும் ஆண்டுக்கு 2.5 முதல் 2.75 சதவீதம் வட்டி வேறு கிடைக்கும். தற்போது தங்க பத்திரம் திட்டத்துக்கு மூடு விழா நடத்தியிருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இருப்பினும், தங்க பத்திர திட்டத்துக்கு மாற்றாக சில முதலீட்டு திட்டங்கள் உள்ளதால் முதலீட்டாளர்கள் அவற்றில் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்களுக்கு இப்போது கோல்டு இடிஎஃப், கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அல்லது பங்குச் சந்தையில் தங்க பத்திரங்களை வாங்குவது போன்ற மாற்று வழிகள் உள்ளன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
தங்க பத்திரங்கள்
இரண்டாம் நிலை சந்தை என்று அழைக்கப்படும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) தங்க பத்திரங்களை ஒருவரால் வாங்க முடியும். டெபாசிட்டரிகளுடன் டி-மேட் வடிவத்தில் வைத்திருக்கும் தங்க பத்திரங்களை மட்டுமே பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி 2015ம் ஆண்டு முதல் கடைசியாக தங்க பத்திரங்களை வெளியிட்டது வரை 67 தங்க பத்திர வெளியீட்டுகளை நடத்தி, 14.7 கோடி பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இவை பங்குச் சந்தைகளில் ரொக்க பிரிவில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. சில்லரை முதலீட்டாளர்கள் அவற்றை டீமேட் கணக்குகள் மூலம் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
கோல்டு இடிஎஃப்
தங்க (கோல்டு) இடிஎஃப் திட்டத்தில், தங்க விலைகளை அடிப்படையாக கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு கோல்டு இடிஎஃப் யூனிட் என்பது, 1 கிராம் தூய தங்கத்துக்கு சமம். கோல்டு இடிஎஃப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால் மிகவும் பாதுகாப்பானது மற்றும் அதிக பணப்புழக்கத்தை கொண்டுள்ளன.
கோல்டு இடிஎஃப்புக்கு கட்டணங்கள் உள்ளன. இருப்பினும் தங்க நகைகளின் மேக்கிங் சார்ஜை காட்டிலும் குறைவுதான். மேலும், கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளை காட்டிலும் இடிஎஃப்களின் செலவு விகிதம் குறைவு. கோல்டு இடிஎஃப் வாங்கும் போதும், விற்பனை செய்யும் போதும் தரகு செலுத்த வேண்டும். முதலீட்டாளர் டீமேட் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே கோல்டு இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
கோல்டு மியூச்சுவல் ஃபண்ட்
கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் என்பது கோல்டு எடிஎஃப்-களின் யூனிட்களில் முதலீடு செய்யும் ஒரு ஒப்பன் என்ட் ஃபண்ட் ஆகும். ஒவ்வொரு கோல்டு மியூச்சுவல் ஃபண்டும் நிதியின் நோக்கத்தின்படி, முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு ஒரு நிதி மேலாளர் இருக்கிறார்.
இடிஎஃப்களுடன் ஒப்பிடுகையில் கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் விலை நிர்ணயம் வித்தியாசமானது. வர்த்தக முடிவில் வெளிப்படுத்தப்படும் நிகர சொத்து மதிப்பு வடிவத்தில் இருக்கும். கோல்டு இடிஎஃப்களை விட கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் செலவு விகிதம் 1-2 சதவீதம் அதிகம். கோல்டு இடிஎஃப்களுடன் ஒப்பிடும்போது கோல்டு மியூச்சுவல் ஃபண்டில் குறைந்த அளவில் முதலீடு செய்யலாம்.
இதனால் சில்லரை முதலீட்டாளர்கள் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டை பொருளாதார ரீதியாக அணுகக்கூடியதாக இருக்கிறது. கோல்டு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஒருவருக்கு டீமேட் கணக்கு அவசியமில்லை. தரவுகளின்படி, கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு வருடத்தில் சுமார் 30 சதவீதம் ஆதாயத்தை வழங்கியுள்ளன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications