டிஜிட்டல் மயமாகி வரும் உலகத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கையில் பணம் இல்லாத நேரத்தில் கிரெடிட்கார்டை பயன்படுத்தி தேவையான பொருட்களையோ அல்லது சேவைகளையோ வாங்கி கொள்ளலாம். கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கும்போது பல்வேறு சலுகைகள், பாயிண்டுகள் போன்றவை கிடைக்கும். இதனால் பலரும் கிரெடிட் கார்டை விரும்பி பயன்படுத்துகின்றனர். இருப்பினும், கடந்த பிப்ரவரி மாதத்தில் கிரெடிட் செலவினம் 9 சதவீதம் குறைந்துள்ளது.
பொதுவாக நிதியாண்டின் இறுதி கட்டத்தில், தனிநபர்கள் வரி வசூல் மற்றும் முதலீட்டு திட்டமிடலில் கவனம் செலுத்துவதால் பிப்ரவரி மாதத்தில் பொதுவாக விருப்ப செலவுகள் குறைவாக இருக்கும். மேலும் முக்கிய பண்டிகைகள் முடிந்து விட்டால் ஹோலி பண்டிகை வரை செலவின முறைகள் பொதுவாக குறைவாகவே இருக்கும். அதனால் கடந்த பிப்ரவரியில கிரெடிட் கார்டு செலவினம் குறைந்திருப்பது ஒரு சீசன் நிகழ்வுதான் என்று கூறப்படுகிறது. ஆசிட் சி மேத்தா முதலீட்டு இன்டர்மேடியட்ஸ் லிமிடெட் வழங்கிய தரவுகளின்படி, 2025 பிப்ரவரி மாதத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலவிப்பது 9 சதவீதம் குறைந்து ரூ.167.20 கோடியாக இருந்தது.

அதேசமயம் 2024 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கிரெடிட் கார்டு செலவினம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் மொத்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளி்ன் எண்ணிக்கையை முந்தைய ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் 2024 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பரிவர்த்தனைகள் 27 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
2025 பிப்ரவரி மாதத்தில் கிரெடிட் வாயிலான ஒரு பரிவர்த்தனைக்கான சராசரி செலவினம் ரூ.4,219ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஜனவரி மாதத்தில் ரூ.4,282ஆக இருந்தது. மொத்த பரிவர்த்தனைகள் மற்றும் சராசரி செலவினம் குறைந்திருப்பது, கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதை பிரதிபலிக்கிறது.
கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, நம் நாட்டில் 10.90 கோடி கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இது முந்தைய ஜனவரி மாதத்தை காட்டிலும் 0.4 சதவீதம் அதிகமாகும். கிரெடிட் கார்டு சந்தையில் எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. மொத்த கிரெடிட் கார்டுகளின எண்ணிக்கை அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதத்தில், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றின் சந்தை பங்களிப்பு 0.10 சதவீதம் உயர்ந்து முறையே 21.6 சதவீதம் மற்றும் 18.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை பங்கு 16.6 சதவீதமாக இருந்தது. ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு சந்தை பங்கு 0.10 சதவீதம் குறைந்து 13.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications