2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை வேகமாக உயர்ந்து வந்தது. இதனை அடுத்து தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கும் மக்களிடையே அதிகரித்தது . தங்கத்தை நகையாக வாங்குவதற்கு மாற்றாக பலரும் டிஜிட்டல் , கோல்ட் ஈடிஎஃப் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்தனர். இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு தங்க முதலீடாக டிஜிட்டல் கோல்டு திட்டங்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தான் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது.
டிஜிட்டல் கோல்டு என்றால் என்ன?: டிஜிட்டல் தங்கம் என்பது , தங்கத்தை டிஜிட்டல் முறையில் அதாவது மெய்நிகர் வடிவில் வாங்குவது. தங்கத்தை நாம் வாங்கி நம் வீடுகளிலோ வங்கிகளிலோ சேமித்து வைத்து பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் வழக்கமாக நாம் தங்கத்தை எப்படி வாங்குவோமோ அப்படியே இதையும் வாங்கலாம். தேவைப்படும்போது விற்பனை செய்யலாம். 2012- 2013 ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் டிஜிட்டல் தங்கம் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன .

எப்படி செயல்படுகிறது?: முதலில் இறக்குமதியாளர்கள் தங்கத்தை வாங்கி தங்களுடைய பெட்டகங்களில் சேமித்து வைத்துக் கொள்வார்கள். இதனை அடுத்து விநியோகஸ்தர்கள் (போன்பே, பேடிஎம், எம்எம்டிசி) டிஜிட்டல் தங்கம் திட்ட தயாரிப்புகளை நமக்கு வழங்குவார்கள். 24 கேரட் மற்றும் 99.9 சதவீத தூய்மை கொண்ட தங்கம் தான் டிஜிட்டல் தங்க வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுகிறது. சுவிஸ் நாட்டை சேர்ந்த பிஏஎம் பிஎஸ்ஏ நிறுவனமும் மத்திய அரசுக்கு சொந்தமான எம்எம்டிசி லிமிடெட் நிறுவனமும் தான் டிஜிட்டல் தங்கம் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களாக இருக்கின்றன.
இந்தியாவில் தற்போது டிஜிட்டல் தங்கத்தை நாம் பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற தளங்கள் வாயிலாக கூட வாங்க முடியும். தங்க நகை விற்பனை செய்யக்கூடிய ஜோஸ் ஆலுகாஸ், தனிஸ்க் போன்ற நிறுவனங்களும் டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்கின்றன.
எவ்வளவு முதலீடு: இந்த ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது . இதனால் டிஜிட்டல் கோல்டு முதலீடுகளும் உயர்ந்துள்ளது. என்பிசிஐ அமைப்பு தரவுகளின் படி, ஜனவரி மாதத்தில் 762 கோடி ரூபாய்க்கு யுபிஐ மூலம் டிஜிட்டல் தங்கம் வாங்கபட்ட நிலையில் செப்டம்பர் மாதத்தில் அது 85 சதவீதம் அதிகரித்து 1410 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.
டிஜிட்டல் தங்கம் சாதக, பாதகங்கள்: தங்கத்தை வாங்கி நாம் சேமித்து வீட்டில் வைத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. டிஜிட்டல் தங்கத்தை பொறுத்தவரை 1 ரூபாயிலிருந்து கூட நாம் தங்கத்தை வாங்க முடியும். 24 மணி நேரமும் இதனை நீங்கள் வாங்கலாம் விற்கலாம். இதை நீங்கள் வேண்டுமென்றால் பிசிகல் கோல்டாக மாற்றிக் கொள்ளலாம் இல்லையென்றால் விற்பனை செய்து பணம் வாங்கிக் கொள்ளலாம் இல்லை. இதில் பேமெண்ட் கேட் வே கட்டணம் மற்றும் குறிப்பிட்ட சில கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
செபி எச்சரிக்கை ஏன்: செபியை பொறுத்தவரை இந்தியாவில் அதிகமானவர்கள் டிஜிட்டல் சங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய சூழலில் முதலீட்டாளர்கள் ஏமாந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் தன்னுடைய எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. சில டிஜிட்டல் தளங்கள் டிஜிட்டல் கோல்டு முதலீடு தொடர்பாக விளம்பரம் செய்து முதலீட்டாளர்களை ஈர்த்து வருவது குறித்து எங்களுக்கு எங்களுடைய கவனத்திற்கு வந்தது என செபி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த தருணத்தில் நாங்கள் கூற விரும்புவது டிஜிட்டல் கோல்டு தயாரிப்புகள் செபி ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க முதலீட்டு திட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை இவற்றை செபி பத்திரங்களாகவோ அல்லது டெரிவேட்டிவ்களாகவோ குறிப்பிடவில்லை , செபியின் கட்டுப்பாட்டு எல்லைக்கு முற்றிலும் வெளியில் தான் இவை செயல்படுகின்றன. எனவே டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய முதலீட்டாளர்களுக்கு அதற்கே உரிய அபாயங்கள் உள்ளன என தெரிவிக்கிறது.
முதலீட்டாளர்கள் செபி ஒழுங்குபடுத்தக்கூடிய கோல்ட் ஈடிஎஃப் , எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிப்ட் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு கூறியிருக்கிறது . டிஜிட்டல் கோல்டு திட்டங்கள் செபியின் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்பதால் ஏதேனும் மோசடி நடக்கும்போது உங்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்காது என்பதே செபி கூறும் எச்சரிக்கை. செபியின் எச்சரிக்கையையும் மீறி நான் டிஜிட்டல் கோல்டில் தான் முதலீடு செய்ய போகிறேன் என கூறும் நபர்கள் புகழ்பெற்ற நிறுவனங்கள் பாரம்பரியமாக வரலாறு கொண்ட நிறுவனங்களை தேடி முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?



Click it and Unblock the Notifications