தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், நம் உணர்வுகளில் கலந்துள்ள ஒரு விலையுயர்ந்த உலோகம். நம்பிக்கை, பாரம்பரியம், அன்பு, காதல், இப்படி பலவற்றின் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இத்தகையை தகுதிகளை கொண்ட தங்கத்தினை அரசின் ஒரு திட்டத்தின் மூலமாக பாதுகாப்பாக வாங்குவது எப்படி? கூடவே தங்கத்திற்கு வட்டியும் கிடைக்கும் என்றால் வேண்டாம் என்றா கூற முடியும்?.
ஐந்தாவது சீரிஸ் தொடக்கம்?
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது தங்க பத்திர விற்பனை பற்றித் தான். இதனை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது என்பதால், இறையாண்மை தன்மை கொண்ட ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் ஐந்தாவது சீரீஸ் ஆகஸ்ட் 9 அன்று தொடங்கவுள்ளது.
அதிகரிக்கும் ஆர்வம்
இது தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் மீதான ஆர்வம் என்பது அதிகம்.
அதிலும் தற்போது டிஜிட்டல் தங்கத்தின் மீதும் தற்போது ஆர்வம் கூடிக் கொண்டே செல்கிறது.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
தற்போது நிலவி வரும் காலகட்டத்தில் மூன்றாவது அலை குறித்தான அச்சமும் எழுந்துள்ளது. மேலும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்த போகின்றதோ? என்ற அச்சமும் நிலவி வருகின்றது.
ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிகல் தங்கத்திற்கு மாற்று
ஆக பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக இந்த தங்க பத்திரங்கள் அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக பிசிகல் தங்கமாக வாங்கும்போது செய்கூலி சேதாரம் என்ற செலவினங்கள் உள்ளன.
பாதுகாப்பு பிரச்சனை உள்ளது. தரம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஓன்றாக உள்ளது.
ஆக வெறுமனே பிசிகல் தங்கமாக அல்லாமல், டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கவர்ச்சிகரமான முதலீடு
தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே பல நிபுணர்களும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் டிஜிட்டல் தங்கத்தினை ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாக முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர்.
ஆரம்பத்தில் தங்க பத்திர திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, ஒரு திட்டமாகத் தான் இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் தற்போது சிறந்த ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
Array
நடப்பு நிதியாண்டின் ஐந்தாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரம் ஆகஸ்ட் 9, 2021 முதல் விற்பனை செய்யப்படும்.
இதனை வாங்க கடைசி தேதி ஆகஸ்ட் 13, 2021 ஆகும்.
அதன் பிறகு ஆகஸ்ட் 17, 2021 அன்று இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு?
இந்த தங்க பத்திரங்கள் கிராமுக்கு 4,790 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.
இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும்.
எங்கெல்லாம் வாங்கலாம்?
இந்த தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும்.
வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது டிஜிட்டல் வங்கி மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். அங்கு டிஜிட்டல் வங்கி மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
என்னென்ன சலுகை?
இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும்.
இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும்.
அவ்வாறு ஆன்லைன் மூலமாக வாங்குபவர்கள் ஐந்தாம் கட்ட வெளியீட்டில் 4,740 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
பிணையமாக வைத்து கடன் பெறலாம்
தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு.
ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு.
பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினையும் பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு வட்டி?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.
இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும்.
வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
கேபிட்டல் டேக்ஸ்
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை.
ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.
தங்க பத்திரம் பிசிகல் தங்கமாக கிடைக்குமா?
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் இது. இந்த தங்க பத்திரங்களுக்கு பதிலாக தங்கமாக வாங்கிக் கொள்ள முடியுமா என்று? இந்த தங்க பத்திரம் முதலீட்டு நோக்கில் உருவாக்க பட்ட ஒரு திட்டம்.
அதோடு பிசிகல் தங்கத்தின் தேவையை குறைக்கும் பொருட்டு தான் அரசு இதனை அறிவித்தது. ஆக இந்த திட்டத்தில் நாம் பிசிகல் கோல்டாக பெற முடியாது.
அடுத்த சீரிஸ் எப்போது?
சீரிஸ் 6
சந்தா தேதி ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 03, 2021, பத்திரம் வழங்கும் தேதி செப்டம்பர் 07, 2021
தங்கத்தினை ஆபரணமாக வாங்கி, அதற்கு செய்கூலி, சேதாரம் என செலுத்துவதை விட, இது போன்று அரசின் தங்க பத்திரங்களை வாங்கி வட்டியுடன் லாபத்தினையும் பெறலாம்.