நாடு முழுவதுமே வீடு, நிலம் உள்ளிட்டவற்றின் விலைகள் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. தற்போது பெரும்பாலானவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்கின்றனர்.
இப்படி நகரங்களில் வேலைக்காக வருபவர்கள் இங்கேயே வாழ்க்கை துணையையும் தேடிக்கொண்டு செட்டில் ஆகிவிடுகின்றனர். ஆனால் இவ்வாறு நகர் பகுதிகளில் வசிக்கக்கூடிய பெரும்பாலான தம்பதிகளுக்கு ஒரு பெரிய குழப்பம் இருக்கிறது. தங்களுக்கான சொந்த வீட்டினை நகரத்தில் வாங்குவதா அல்லது தங்களுடைய சொந்த ஊரில் வாங்குவதா என்ற குழப்பம் இருக்கிறது.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவு, நம் பல ஆண்டுகால சம்பளத்தை இதற்காக நாம் தர வேண்டி இருக்கிறது. எனவே தான் வீடு வாங்குவது நமக்கு லாபமாகவும் இருக்க வேண்டும் அதே சமயத்தில் அது வளர்ச்சி அடையும் ஒரு சொத்தாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஒரு வேளை உங்களின் சொந்த ஊரில் நீங்கள் ஒரு நிலமோ அல்லது வீடோ வாங்குகிறீர்கள் என்றால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களாகவும் சொந்தக்காரர்களாகவும் உங்களுடைய கலாச்சார பழக்க வழக்கங்களுக்கு ஒத்துப்போனவர்களாகவும் இருப்பார்கள். சொந்த ஊருக்கான உங்களின் தொடர்பு நீடித்து கொண்டே இருக்கும்.
பெற்றோர், உற்றார் உறவினர்கள் இருப்பார்கள் என்பதால் சொத்தினை வாங்கும் போது ஏமாறமாட்டீர்கள், அந்த சொத்தினை மேலாண்மை செய்வது எளிது, ஒரு வேளை இடமாக வாங்கி நீங்கள் வீடு கட்டினால் உங்களுக்கு பெரிய அளவில் உதவிகள் கிடைக்கும்.
ஆனால் இது ஒரு முதலீடாக பார்க்கும் போது வளர்ச்சி அடையுமா இல்லையா என்ற கேள்வி இருக்கிறது. சொந்த ஊரில் வாங்கக்கூடிய வீடு அல்லது நிலம் உங்களுக்கு பாதுகாப்பான முதலீடாக இருக்கலாம் ஆனால் வேகமான வளர்ச்சி அடையாது. நகர்ப்புறங்களில் நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் பெருக்கத்திற்கு ஏற்ப ரியல் எஸ்டேட் மதிப்பு வேகமாக வளர்கிறது. அந்த அளவுக்கு வளர்ச்சி சொந்த ஊரில் இருக்காது. அதாவது நகர்ப்புறங்களில் சொத்தின் மதிப்பு உயர்வதை போல சொந்த ஊரில் உயராது.
நகரங்களில் வீடு வாங்கினால் அதன் மதிப்பு வேகமாக உயரும். ஆனால் நகர்ப்புறங்களில் நீங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தது ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இடம் வாங்கி வீடு கட்டுவது என்றாலும் கணிசமான தொகை தேவைப்படும். ஆனால் அதே பணத்திற்கு சொந்த ஊரில் மாட மாளிகையே கட்டலாம்.
ஆனால் சொந்த ஊரில் வீடு கட்டினால் உங்களால் அங்கே சென்று வசிக்க முடியாது. நகரத்தில் நீங்கள் வீட்டு வாடகை கொடுத்தே ஆக வேண்டும். எனவே தான் சொந்த வீடு வாங்கும் முடிவை எடுக்கும் போது எதிர்காலத்தில் எங்கே செட்டிலாக போகிறீர்கள், குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி திட்டமிடப் போகிறீர்கள், உங்களின் தற்போதைய நிதி நிலவரம் என்ன என்பதை அடிப்படையாக கொண்டு முடிவெடுப்பது தான் சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள்.
More From GoodReturns

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க



Click it and Unblock the Notifications