சென்னை: சர்வதேச நிதி சூழல் காரணமாக தங்கத்தின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த மூன்று மாத காலத்திலேயே தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும். கடந்த மூன்று மாதங்களில் பல மடங்கு உயர்ந்து விட்டது.
சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி அன்று 24 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,796 ரூபாய் என இருந்தது அதுவே தற்போது அதுவே ஏப்ரல் 5ஆம் தேதி 9,065 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே இருந்து வருவதையே இது காட்டுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்திருக்கும் இந்த சூழலை பயன்படுத்தி கொண்டு நம் கைவசம் இருக்கும் பழைய தங்கத்தை விற்பனை செய்யலாமா அவ்வாறு விற்பனை செய்யும் போது நாம் வரி செலுத்த வேண்டுமா என சந்தேகம் எழும். அது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளத்தில் ஒரு நபர் தன் தாத்தாவால் வாங்கப்பட்ட நகையை விற்பனை செய்ய போவதாகவும் அதற்கு வரி இருக்கிறதா என்றும் எழுப்பியுள்ள கேள்விக்கு நிதித்துறை சார்ந்த நிபுணர் ஒருவர் பதில் தந்திருக்கிறார். அதில் தங்க நகைகளின் விற்பனைக்கு மூலதன ஆதாயங்கள் என்ற பிரிவின் கீழ் வரி விதிக்கப்படும் எனக் கூறுகிறார். இது உங்கள் தாத்தாவால் வாங்கப்பட்ட நகை என்பதால் இது மூலதன சொத்தாக கருதப்படும் என கூறியுள்ளார். மேலும் இது 2001 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னர் வாங்கியிருந்தால், 2001 ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி நியாயமான சந்தை மதிப்பின் அடிப்படையில் அதனை வாங்கியதற்கான செலவு தீர்மானிக்கப்படும் என கூறியுள்ளார்.
நாம் வாங்கிய தங்கத்தை 24 மாதங்களுக்குள் விற்பனை செய்தால் அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரியும் , 24 மாதங்களுக்கு மேல் விற்பனை செய்யும் போது நீண்ட கால மூலதன ஆதாய வரியும் விதிக்கப்படும். அந்த வகையில் இந்த நபர் தன்னுடைய தாத்தா வாங்கிய நகையை தான் தற்போது விற்பனை செய்கிறார் எனும் போது அவருக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரியானது
விற்பனை விலை - 2001 ஏப்ரல் ஒன்றாம் தேதி நிலவரப்படி இந்த நகையை வாங்கியதற்கான செலவு = நீண்ட கால மூலதன ஆதாய வரி
என்ற ஃபார்முலாவின் படி கணக்கிடப்படும். இந்தியாவில் நீண்ட கால மூலதன ஆதாய வரி என்பது 12.5% ஆக விதிக்கப்படுகிறது. இத்துடன் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. ஒருவேளை அவருடைய தாத்தா இந்த நகையை வாங்கியதற்கான ரசீதுகள் இல்லை என்றால் பதிவு செய்யப்பட்ட நகை மதிப்பீட்டாளர் இந்த நகையை மதிப்பீடு செய்து ரசீது வழங்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
நகையை வாங்கிய 24 மாதங்களுக்குள் விற்பனை செய்கிறோம் எனும் போது அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நபர் எந்த வருமான வரி விகிதத்திற்குள் வருகிறாரோ அதன் அடிப்படையில் வரி கணக்கீடு செய்யப்படும். அந்த நகையை விற்பனை செய்து நீங்கள் சொத்து வாங்குகிறீர்கள் எனும் போது வருமான வரி சட்டத்தின் பிரிவு 54 எஃப்-ஐ பயன்படுத்தி வரி விலக்கு கோரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications