அவசர அவசரமாக கணக்கை முடித்த முதலீட்டாளர்கள் ... கலக்கத்தில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள்

சாமானிய மக்கள் தற்போது பாரம்பரியமான முதலீடுகளான ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் பிக்சட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்வதை காட்டிலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. அதேசமயம், பங்குச் சந்தையில் ஒருவர் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது.

எஸ்ஐபி
எஸ்ஐபி வழிமுறையில் பலரும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். எஸ்ஐபி என்பது குறிப்பிட்ட கால இடைவெளியில் (உதாரணமாக மாதந்தோறும்) குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்வதாகும். ஒரு சிறிய தொகையை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதலீடு செய்வது எளிது என்பதால் எஸ்ஐபி வழிமுறையில் பலரும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.

அவசர அவசரமாக கணக்கை முடித்த முதலீட்டாளர்கள் ...  கலக்கத்தில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்ஐபி பங்களிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்ஐபி பங்களிப்பு ரூ.26,632 கோடியை எட்டியது. இது ஒரு மாதத்தில் இதுவரை இல்லாத அதிகபட்சமாகும்.

மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்ஐபி பங்களிப்பு அதிகரித்து இருப்பது மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதேசமயம், கடந்த ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி (SIP) நிறுத்த விகிதம் கடுமையாக உயர்ந்திருப்பது மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்ஐபி நிறுத்த விகிதம்
மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி நிறுத்த விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் புதிதாக பதிவு செய்யப்பட்ட எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கையுடன் நிறுத்தப்பட்ட அல்லது முதிர்ச்சியடைந்த எஸ்ஐபி கணக்கு எண்ணிக்கையை ஒப்பிட்டு கிடைக்கும் விகிதமாகும். இந்த விகிதம் 100 சதவீதத்தை தாண்டினால், புதிதாக தொடங்கப்பட்டதை விட, அதிகளவில் மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி கணக்குகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை குறிக்கும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி நிறுத்த விகிதம் 297.74 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய மார்ச் மாதத்தில் இது 128.27 சதவீதம் என்ற அளவில்தான் இருந்தது. எஸ்ஐபி நிறுத்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி (SIP) நிறுத்த விகிதம் 52.24 சதவீதம் என்ற அளவில்தான் இருந்தது.

புதிய எஸ்ஐபி
கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.36 கோடி எஸ்பிஐ கணக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது முதிர்வு அடைந்துள்ளது. அதேசமயம் அந்த மாதத்தில் புதிதாக 46.01 லட்சம் எஸ்ஐபிக்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு 2025-26ம் நிதியாண்டில் செயல்பாட்டில் உள்ள எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை 9.14 கோடியாக உள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி நிறுத்த விகிதம் 75.63 சதவீதமாக இருந்தது. அந்த நிதியாண்டில் 5.14 கோடி எஸ்ஐபி கணக்குகள் ரத்து செய்யப்பட்டன மற்றும் புதிதாக 6.79 கோடி எஸ்பிஐ கணக்குகள் பதிவானது.

மீண்டும் ஜோடி சேர்ந்த அமெரிக்கா-சீனா.. பங்குச் சந்தையை கலக்கிய மெட்டல் பங்குகள்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+