பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது கருவுற்றிருக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்ட மத்திய அரசின் முக்கிய திட்டமாகும்.
கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் மருத்துவச் சிகிச்சை மற்றும் மருந்துச் செலவுகளுடன் தொடர்புடைய நிதிச் சுமையைத் தணிக்க இத்திட்டம் உருவாக்கப்பட்டது உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிப்பது மூலம் இந்தியாவில் கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின்
ஊட்டச்சத்து குறைபாடுகளை தீர்க்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

PMMVY திட்டம் எவ்வாறு செயல்படுகிறது: PMMVY திட்டத்தின் கட்டமைப்பிற்குள் இணையும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சுமார் 5,000 ரூபாயை பணத்தை அவர் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மூன்று தவணையாக பிரித்து Direct Benefit Transfer (DBT) திட்டத்தின் மூலம் டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்த 5000 உதவி தொகையின் ஆரம்ப தவணையாக ரூ.1,000 கர்ப்பப் பதிவின் போது வழங்கப்படுகிறது, இரண்டாவது தவணை ரூ.2,000 கர்ப்ப காலத்தில் ஆறாவது மாதத்தில் குறைந்தபட்சம் ஒரு பரிசோதனையைத் செய்தப்பின்பு வழங்கப்படுகிறது. குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிறகு மூன்றாவது மற்றும் இறுதி தவணையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.
PMMVYக்கு யார் தகுதியானவர்? : PMMVY திட்டத்தின் கீழ் பலன் பெறவேண்டுமெனில் அடிப்படை தகுதியாக தினசரி ஊதியம் பெறும் அல்லது பொருளாதார ரீதியாக கீழ்மட்டத்தில் இருக்கும் பெண்களாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஊதிய இழப்பின் தாக்கத்தை குறைப்பதும், இந்த முக்கியமான காலகட்டத்தில் பெண்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சையை பெறுவதை உறுதி செய்வதும் தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டம் எந்தவொரு மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களுடன் பணியாற்றும் பெண்களுக்கு கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும், முதல் குழந்தைக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்பதையும் மறந்து விடக்கூடாது. PMMVY திட்டத்தின் மூலம் இந்தியாவில் தாய்வழி ஆரோக்கியத்தில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதிச் சலுகைகள் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியைக் குறைத்துள்ளன. இது அவர்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துச் செலவுகளின் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications