சென்னை: தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள் தங்க நகைகளாக வாங்காமல் கோல்டு ஈடிஎஃப்களில் ( Gold ETF) முதலீடு செய்தால் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம் என நிதித்துறை சார்ந்த மற்றும் முதலீடு சார்ந்த நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
அதாவது தங்கத்தை நாம் நகையாக வாங்கும் போது அதற்கு செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவற்றை வழங்குகிறோம். முதலீடாக தங்கம் வாங்க வேண்டும் என்றால் நகையாக வாங்குவோருக்கு செய்கூலி சேதாரம் கூடுதல் சுமை. எனவே அதற்கு பதிலாக கோல்டு ஈடிஎஃப்களாக வாங்கலாம் என கூறுகின்றனர். இவ்வாறு கோல்டு ஈடிஎஃப்-இல் முதலீடு செய்யும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதிக சந்தை மூலதன மதிப்பு: இந்தியாவில் நிப்பான், ஐசிஐசிஐ, எஸ்பிஐ போன்ற பல்வேறு நிறுவனங்கள் கோல்டு ஈடிஎஃப்களில் முதலீடு செய்யும் வாய்ப்புகளை வழங்குகின்றன. முதலில் அதிகபட்ச சந்தை மூலதனம் கொண்ட ஈடிஎஃப் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அதிகபட்ச சந்தை மூலதனம் கொண்ட கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யும் போது நாம் நமக்குத் தேவையான நேரத்தில் உடனடியாக அதனை விற்று திரும்ப பணமாக பெற்றுக்கொள்ள முடியும்.
அதாவது அதிக சந்தை மூலதனம் கொண்ட ஒரு நிதி எனும் போது அதனை வாங்குவதற்கு எப்பொழுதுமே சந்தையில் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். எனவே நாம் முதலீடு செய்யக்கூடிய கோல்ட் ஈடிஎஃப்பின் சந்தை மூலதனம் எவ்வளவு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
குறைந்த டிராக்கிங் எரர்: குறைந்தபட்ச டிராக்கிங் எரர் கொண்ட ஈடிஎஃப்களில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக தங்கம் 10% வருமானம் தந்திருக்கிறது அதுவே நீங்கள் வாங்கிய ஈடிஎஃப்பும் 10% வருமானம் தந்திருக்க வேண்டும். ஆனால் சில ஈடிஎஃப்கள் 9% அல்லது அதற்கும் கீழ் வருமானம் தந்திருக்கும். இதை தான் டிராக்கிங் எரர் என அழைக்கிறார்கள். எனவே டிராக்கிங் எரர் விகிதம் குறைவாக இருந்தால் அது நமக்கு தங்கத்துக்கு நிகரான வருமானத்தை கொடுக்கும் ஈடிஎஃப் ஆகும்.
எக்ஸ்பென்ஸ் ரேஷியோ: மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலவே ஈடிஎஃப் திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட நிறுவன திட்டத்தை தேர்வு தேர்ந்தெடுத்து நாம் முதலீடு செய்யும்போது அவர்கள் அதனை நிர்வகிக்க குறிப்பிட்ட சதவீதத்தை எக்ஸ்பென்ஸ் ரேஷியோவாக எடுத்துக் கொள்வார்கள். எந்த நிறுவனம் குறைந்த அளவு எக்ஸ்பென்ஸ் ரேஷியோ வைத்திருக்கிறதோ அந்த நிறுவனத்தை தேர்வு செய்து முதலீடு செய்வது சிறந்தது.
தங்கம் காலா காலத்துக்கு பாதுகாப்பான முதலீடு. நாம் பாரம்பரியமாக தங்கத்தை நகை, நாணயம் மற்றும் பார்களாக வாங்கி சேமித்தோம், அதுவே தற்போது exchange traded fund என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களால் ஈடிஎஃப்களாக கிடைக்கின்றன. பலரும் தற்போது அந்த முதலீட்டை நோக்கி நகர்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் சரியான திட்டத்தை தேர்வு செய்தால் லாபம் கணிசமாக கிடைக்கும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

ரூ.4கோடி கார்பஸ்! உங்கள் ரிட்டையர்மென்ட்டை ராஜவாழ்க்கையாக்குவது எப்படி? கோடீஸ்வர கனவு நனவாகுமா?

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!



Click it and Unblock the Notifications