கொரோனா வைரஸ் பில் கேட்ஸ் தொடங்கி உள்ளூர் இட்லி கடை சுந்தரி அக்கா வரை யாரையும் விட்டு வைக்கவில்லை.
பில்லியனர்கள் எல்லாம் 2 பில்லியன் 3 பில்லியன் என தங்கள் சொத்து மதிப்புகளை இழந்து கொண்டே இருக்கிறார்கள்.
"எப்படி இருந்தாங்க.. இப்படி ஆயிட்டாங்களே.. பயங்கர சொத்து மதிப்பு சரிவில் இந்திய பில்லியனர்கள்!" என்கிற தலைப்பில் இந்திய பில்லியனர்களில் யார், எவ்வளவு சொத்து மதிப்புகளை இழந்து இருக்கிறார்கள் என விவரித்து இருக்கிறோம். அதைப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்:
முந்திய பெண்
இந்த களேபரத்துக்கு நடுவில், நம் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் மற்றும் இந்திய பிசினஸ் ஜாம்பவான் முகேஷ் அம்பானியை, ஒரு பெண் பில்லியனர் சொத்து மதிப்பிலேயே முந்தி இருக்கிறார். அது எப்படி நடந்தது? பல பில்லியனர்களின் சொத்து மதிப்பு சரியும் போது இந்த பெண்ணின் சொத்து மதிப்பு மட்டும் எப்படி உயர்ந்தது? யார் அந்தப் பெண்?
அந்தப் பெண்
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் & தலைவர் ஜெஃப் பிசாஸை எல்லோருக்கும் தெரியும். அவரின் முன்னாள் மனைவி தான் அந்தப் பெண். அவர் பெயர் மெக்கென்ஸி பிசாஸ். இவர் கடந்த 2019-ம் ஆண்டில் தான் ஜெஃப் பிசாஸை விவாகரத்து செய்தார். விவாகரத்தின் போது தான் ஒரு கணிசமான அமேசான் நிறுவன பங்குகள் அவருக்கு கிடைத்தது.
எவ்வளவு பங்கு
அமேசான் நிறுவனத்தின் மொத்த பங்கில் சுமார் 4 சதவிகித பங்குகள், விவாகரத்து செட்டில்மெண்டாக மெக்கென்ஸி பிசாஸுக்கு கிடைத்தது. இன்று, அமேசான் நிறுவனத்தின் பங்குகளை அதிக எண்ணிக்கையில் வைத்திருக்கும் இரண்டாவது தனி நபர் நம் மெக்கென்ஸி பிசாஸ் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பில்லியனர்
இவர் விவாகரத்து செட்டில்மெண்ட் வாங்கிக் கொண்ட உடனேயே அசால்டாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். நேற்று ஏப்ரல் 15, 2020 அன்று அமேசான் நிறுவன பங்குகளின் விலை 5.3 சதவிகிதம் அதிகரித்தது. இதனால், மெக்கென்ஸி பிசாஸ்-ன் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் 8.2 பில்லியன் டாலர் அதிகரித்துவிட்டதாகச் சொல்கிறது பிசினஸ் இன்சைடர்.
45 பில்லியன் டாலர்
ஃபோர்ப்ஸ் பத்திரிகை கணக்குப் படி, தற்போது மெக்கென்ஸி பிசாஸ், 45.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், நம் இந்தியாவின் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி இருக்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42.6 பில்லியன் டாலருடன் பின் தங்கி இருக்கிறார்.
ஒரே மாதத்தில் 9 பில்லியன்
நம் மெக்கென்ஸி பிசாஸின் சொத்து மதிப்பு, கடந்த ஏப்ரல் 2020-ல் 36 பில்லியன் டாலராகத் தான் இருந்திருக்கிறது. அதை ஃபோர்ப்ஸ் உறுதி செய்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களில் அமேசான் நிறுவன பங்குகளின் விலை ஏற்றத்தால் தற்போது 45.1 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது மெக்கென்ஸி பிசாஸ்-ன் சொத்து மதிப்பு.
அமேசான் பங்குகள்
நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் அமேசான் நிறுவன பங்குகள் கடந்த ஒரு மாத காலமாக வெறித்தனமாக ஏற்றம் கண்டு வருகின்றன. கடந்த மார்ச் 16, 2020-ல் 1,689 டாலராக இருந்த பங்கு, நேற்று 2,307 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக ஒரே மாதத்தில் சுமார் 36% விலை ஏற்றம் கண்டிருக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications