சீனாவில் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்நாட்டு மியூச்சுவல் பண்ட் துறையின் மதிப்பு சுமார் 4.6 லட்சம் கோடி டாலராக உள்ளது. பொதுவாக ஒரு மியூச்சுவல் பண்ட் திட்டம் நல்ல வருவாய் கொடுத்தால்தான் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் அதில் முதலீடு செய்வர். பண்ட் மேலாளர்கள் பண்டை சிறப்பாக நிர்வகித்தால் நல்ல வருவாய் கிடைக்கும். இதனை கருத்தில் கொண்டு சீன ஒழுங்குமுறை அமைப்பு, மியூச்சுவல் பண்ட் துறையில் அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. நீண்ட கால முதலீட்டை ஊக்குவிக்க நிதி மேலாளர்களை ஊக்குவிப்பதே இந்த சீர்திருத்த்தின் நோக்கமாகும்.
அதாவது, சீனாவில், ஒரு பண்ட் நஷ்டத்தை சந்தித்தாலோ அல்லது அதன் பெஞ்ச்மார்க்கை காட்டிலும் 10 சதவீதம் வரை குறைவான வருமானத்தை கொடுத்தாலோ. சம்பந்தப்பட்ட நிதி மேலாளரின் சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என்று அந்நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பான சீனப் பத்திர ஒழுங்குமுறை ஆணையம் (சிஎஸ்ஆர்சி) என்று முன்மொழிந்துள்ளது. இந்த முயற்சி நிதி மேலாளர்களுக்கான நீண்ட கால மதிப்பீட்டு கட்டமைப்பை நிறுவுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்த திட்டம் தற்போது வரைவு கட்டத்தில் உள்ளது மற்றும் இறுதி செய்யப்படவில்லை. மேலும் இந்த கொள்கை எப்போது அமலுக்கு வரும் என்பது தெளிவாக தெரியவில்லை.

வேல்யூ ரிசர்ச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரேந்திர குமார் கூறுகையில், இந்த முயற்சி சீனாவின் பரந்த பொதுவான செழிப்பு பிரச்சாரத்துடன் ஒத்துப்போகிறது. இது வருமான சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதையும் சமமான செல்வ பகிர்வை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மியூச்சுவல் பண்ட் துறையின் அனுபவமிக்கவரான குமார் தனது எக்ஸ் பதிவில், சீன அரசுக்கு சொந்தமான நிதி நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 1.37 லட்சம் டாலர் சம்பள உச்சவரம்பை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை முக்கியமாக நடுத்தர மற்றும் மூத்த மேலாளர்களை பாதிக்கிறது, வெட்டுக்கள் பெரும்பாலும் குறைக்கப்பட்ட போனஸிலிருந்து வருகின்றன. இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் நிதித்துறையில் நியாயத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை பிரதிபலிக்கின்றன, இழப்பீடு செயல்திறனுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அதிகப்படியான வருமானங்கள் குறைக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்கிறது என்று பதிவு செய்து இருந்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications