சீனாவில் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்நாட்டு மியூச்சுவல் பண்ட் துறையின் மதிப்பு சுமார் 4.6 லட்சம் கோடி டாலராக உள்ளது. பொதுவாக ஒரு மியூச்சுவல் பண்ட் திட்டம் நல்ல வருவாய் கொடுத்தால்தான் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் அதில் முதலீடு செய்வர். பண்ட் மேலாளர்கள் பண்டை சிறப்பாக நிர்வகித்தால் நல்ல வருவாய் கிடைக்கும். இதனை கருத்தில் கொண்டு சீன ஒழுங்குமுறை அமைப்பு, மியூச்சுவல் பண்ட் துறையில் அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. நீண்ட கால முதலீட்டை ஊக்குவிக்க நிதி மேலாளர்களை ஊக்குவிப்பதே இந்த சீர்திருத்த்தின் நோக்கமாகும்.
அதாவது, சீனாவில், ஒரு பண்ட் நஷ்டத்தை சந்தித்தாலோ அல்லது அதன் பெஞ்ச்மார்க்கை காட்டிலும் 10 சதவீதம் வரை குறைவான வருமானத்தை கொடுத்தாலோ. சம்பந்தப்பட்ட நிதி மேலாளரின் சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என்று அந்நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பான சீனப் பத்திர ஒழுங்குமுறை ஆணையம் (சிஎஸ்ஆர்சி) என்று முன்மொழிந்துள்ளது. இந்த முயற்சி நிதி மேலாளர்களுக்கான நீண்ட கால மதிப்பீட்டு கட்டமைப்பை நிறுவுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்த திட்டம் தற்போது வரைவு கட்டத்தில் உள்ளது மற்றும் இறுதி செய்யப்படவில்லை. மேலும் இந்த கொள்கை எப்போது அமலுக்கு வரும் என்பது தெளிவாக தெரியவில்லை.

வேல்யூ ரிசர்ச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரேந்திர குமார் கூறுகையில், இந்த முயற்சி சீனாவின் பரந்த பொதுவான செழிப்பு பிரச்சாரத்துடன் ஒத்துப்போகிறது. இது வருமான சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதையும் சமமான செல்வ பகிர்வை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மியூச்சுவல் பண்ட் துறையின் அனுபவமிக்கவரான குமார் தனது எக்ஸ் பதிவில், சீன அரசுக்கு சொந்தமான நிதி நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 1.37 லட்சம் டாலர் சம்பள உச்சவரம்பை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை முக்கியமாக நடுத்தர மற்றும் மூத்த மேலாளர்களை பாதிக்கிறது, வெட்டுக்கள் பெரும்பாலும் குறைக்கப்பட்ட போனஸிலிருந்து வருகின்றன. இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் நிதித்துறையில் நியாயத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை பிரதிபலிக்கின்றன, இழப்பீடு செயல்திறனுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அதிகப்படியான வருமானங்கள் குறைக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்கிறது என்று பதிவு செய்து இருந்தார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications