பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அபாயகரமான பொருளாதார சூழல்கள் ஏற்படும் போதெல்லாம் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கு அதிகரித்துள்ளது.
டாலரின் மதிப்பு சரிந்து வருவதும் அமெரிக்க பல்வேறு நாடுகளுடன் வர்த்தக மோதலில் ஈடுபடுவதும், புவி சார் பதட்டங்களும் உலக நாடுகளை அதிக தங்கம் வாங்க செய்கின்றன. அதாவது கரன்சிகளின் மதிப்பு குறையலாம் அல்லது முடக்கப்படலாம், ஆனால் நம் கைவசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஒரு லாஜிக் தான் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளையும் அதிக தங்கம் வாங்க வைக்கிறது.

2025 ஆம் ஆண்டில் போலந்து நாடுதான் அதிக அளவு தங்கம் வாங்கிய நாடாக இருந்தது. உலக தங்க கவுன்சில் அறிக்கையின் படி 2025ஆம் ஆண்டில் மட்டும் போலந்து நாட்டு மத்திய வங்கி 100 டன்களுக்கும் அதிகமாக தங்க வாங்கி இருப்பு வைத்துள்ளது. நடப்பாண்டிலும் இதனை விட அதிகமாக தங்கம் வாங்க அந்த நாடு முடிவு செய்திருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று தான் போலந்து. இந்த நாட்டின் தேசிய வங்கியிடம் தற்போது 550 டன்கள் தங்கம் கையிருப்பு இருக்கிறது. இது ஐரோப்பிய மத்திய வங்கியை விட அதிகம். ஐரோப்பிய மத்திய வங்கியே 500 டன்கள் தங்கம் தான் கையிருப்பாக வைத்துள்ளது. ஆனால் அதனை கூட கூடுதலாக 50 டன்கள் தங்கத்தை வைத்திருக்கும் போலந்து இந்த ஆண்டுக்குள் அதனை 700 டன்கள் என உயர்த்த முடிவு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் போலந்து நாட்டின் கையிருப்பில் 16.86 சதவீதமாக இருந்த தங்கம் 2025 ஆம் ஆண்டு இறுதியில் 28.22% என உயர்வு கண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் அதிகளவு தங்கம் வாங்கியதே இதற்கு முக்கிய காரணம். இந்த ஆண்டில் 150 டன்கள் தங்கம் வாங்க முடிவு செய்துள்ளதாக போலந்து நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உலக அளவில் அதிகரித்து வரக்கூடிய வர்த்தக மோதல்கள் மற்றும் பொருளாதார சூழல்களுக்கு மத்தியில் தங்கம் தான் பாதுகாப்பான ஒரு விஷயமாக இருக்கிறது என்பதால் அதிகளவு தங்கம் வாங்குவதாக தெரிவித்திருக்கிறார் போலந்து மத்திய வங்கியின் தலைவர். போலந்து இந்த ஆண்டு தங்க இருப்பை 700 டாலர்கள் என உயர்த்தினால் உலக அளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 12ஆவது இடத்தில் இருந்து 10ஆவது இடத்திற்கு வந்துவிடும்.
போலந்தின் இந்த நடவடிக்கையை மற்ற நாடுகளும் பின்பற்ற தொடங்கினால் 2025ஐ போலவே 2026ஆம் ஆண்டிலும் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாகி அதன் விலை உயர வாய்ப்பு ஏற்படும். இப்படி உலக நாடுகள் தங்க கட்டிகளை அதிகமாக வாங்கி வைப்பது இறுதியில் டாலரை மதிப்பை குறைக்க செய்து, யார் வசம் அதிக தங்கம் உள்ளதோ உலக அரசியலில் அவர்களின் கைதான் ஓங்கியதாக இருக்கும், என்ற நிலையை உண்டாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications