மும்பை: மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி இந்திய பங்குச்சந்தையையும் பதம் பார்த்துள்ளது. இந்த மோசடியில் ஹரி சங்கர் திபெர்வாலாவுடன் தொடர்புகொண்ட நிறுவனங்களும் சிக்கி இருப்பதால் இந்திய பங்குச்சந்தையில் ஸ்மால்கேப் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன. மகாதேவ் சூதாட்ட மோசடியில் சிக்கிய பல்வேறு ஸ்மால்கேப் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.
சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், அவரது நண்பர் ரவி உப்பால் ஆகியோர் மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தினர். ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த செயலி செயல்பட்டது. சவுரப் சந்திரகர் இந்தியாவில் இருந்தபோது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டு தனது நண்பர் ரவி உப்பாலுடன் துபாய் சென்று, அங்கு கடை நடத்திக்கொண்டே சூதாட்ட செயலியை உருவாக்கி இந்தியாவில் அதனை அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த செயலியின் மூலம் பல கோடி ரூபாய் பணத்தை இந்தியாவுக்கு அனுப்ப சிறு நிறுவனங்களை தேர்வு செய்து இவர்கள் முதலீடு செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமலாக்கத்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.417 கோடி முடக்கப்பட்டது. மேலும் இதில் ரூ.5,000 கோடி அளவுக்கு பணமோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
திபெர்வாலா , மோசடி செய்து ஈட்டிய பணத்தை ஸெனித் மல்டி டிரேடிங் டிஎம்சிசி, எபிலிட்டி கேம்ஸ், தனோ இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்டு, டிஸ்கவரி பில்டுகான், பிரில்லியண்ட் இண்வெஸ்ட்மெண்ட், யூதிஷ் சொலுயூசன்ஸ் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இந்த மோசடியுடன் தொடர்புடையதாக பேசப்படும் சிறு நிறுவனங்கள் கடந்த சில வாரங்களாக பெரும் இழப்பை சந்தித்துள்ளன.
இதில் சம்பந்தப்பட்ட பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஸ்மால்கேப் மற்றும் பென்னி பங்குகள் இந்த மாதத்தில் மட்டும் 37% சரிந்துள்ளன. குற்றம்சாட்டப்பட்ட ஹரி சங்கர் திபெர்வாலா மற்றும் அவருடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சுமார் 30க்கும் அதிகமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ளன. இவை அனைத்தும் சரிவில் உள்ளன.
உதாரணமாக ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 800% லாபம் தந்தது, ஆனால் மார்ச் 1 முதல் அதன் மதிப்பு மூன்றில் ஒன்று என சரிந்துள்ளது. கிட்டத்தட்ட 33% மதிப்பு குறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல தோய்னாம் ஸ்போர்ட்ஸ் நிறுவன பங்கு 31 % மற்றும் டைகர் லாஜிஸ்டிக்ஸ் பங்கு 28% என இந்த மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனங்கள் அனைத்துமே மைனஸில் செல்கின்றன.
Story Written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications