கிரிப்டோ கரன்சி சந்தையில் முதலீடு செய்யும் அளவும், மக்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப கிரிப்டோ நாணயத்தின் மதிப்பும் தாறுமாறாக உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
7 மடங்கு உயர்வு
2017ஆம் ஆண்டில் மட்டும் பிட்காயின் மதிப்பு 7 மடங்கு அதாவது 700 சதவீதம் உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் முதல் பிட்காயின் மதிப்பு 4.8 சதவீதம் அளவிற்கு உயர்ந்து ஒரு பிட்காயின் மதிப்பு 8,071.05 டாலராக உயர்ந்துள்ளது.
ஒரு மாதம்
இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதன் மதிப்பு 29 சதவீதம் வரையில் உயர்ந்து நாள்தோறும் புதிய முதலீட்டாளர்களை ஈர்த்த வண்ணம் உள்ளது.
தொடர் முதலீடு
கிரிப்டோகரன்சி குறித்துப் பல விதமான எதிர்ப்புகள் கருத்துக்கள் நிலவினாலும் இதன் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. மேலும் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய மக்கள் மிகவும் ஆர்வமாகவே உள்ளனர்.
முக்கிய நாடுகள்
சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் கிரிப்டோகரன்சிக்கு மறுப்பு தெரிவிக்கும் காரணத்தால் இதன் வளர்ச்சி மிதமான வேகத்தில் உள்ளதாகத் தெரிகிறது. பங்குச்சந்தை, நாணய சந்தை போலக் கிரிப்டோகரன்சி சந்தையிலும் அனைத்து நாடுகள் மற்றும் வர்த்தகச் சந்தையில் ஒப்புதல் பெற்றால் 6 மாத காலத்தில் அனைத்து கிரப்டோகரன்சி மதிப்பும் இருமடங்காக அதிகரிக்கும்.