இந்தியர்கள் அதிகளவில் ரஷ்யாவில் வசித்து வருகின்றனர். கல்வி, வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக நம்மவர்கள் ரஷ்யாவுக்கு செல்கின்றனர். இந்தியர்கள் ரஷ்யாவில் அந்நாட்டு வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இந்தியர்கள் ரஷ்யாவில் வங்கி கணக்கு தொடங்குவதற்கான விதிமுறைகள் கொஞ்சம் கடுமையாக இருந்தது. இதுவரை இந்தியர்கள் ரஷ்யாவில் உள்ள வங்கிகளுக்கு நேரடியாக சென்று மட்டுமே வங்கி கணக்கை தொடங்க முடியும்.
ஆனால் தற்போது தங்கள் நாட்டில் இந்தியர்கள் வங்கி கணக்கை தொடங்குவதற்கான விதிமுறைகளை ரஷ்யா எளிமையாக்கியுள்ளது. இதன் மூலம், ரஷ்ய வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்க விரும்பும் இந்தியர்கள் நம் நாட்டில் இருந்தபடியே ரஷ்ய வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்க முடியும். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் சமூக ஊடகமான எக்ஸில், ரஷ்யாவின் நிதி நிறுவனங்களில் வங்கி கணக்குகளை திறக்க விரும்பும் இந்தியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் ரஷ்ய அரசாங்கத்தின் முடிவை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இனி தொலைவில் இருந்து ரஷ்ய வங்கிகளில் கணக்கை திறக்கவோ அல்லது பணத்தை டெபாசிட் செய்யவோ முடியும்.
ரஷ்ய வங்கிகளில் கணக்கை திறக்க விரும்பும் இந்தியர்கள் வழிகாட்டுதலுக்காக ரஷ்யாவின் மத்திய வங்கியுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ள வங்கிகளை அணுக வேண்டும். ரஷ்யாவிற்கு வந்ததும், கூட்டாளியான ரஷ்ய வங்கியில் வங்கி அட்டையை விரைவாக பெறுவது மற்றும் நிதி பரிவர்த்தனைகளை தொடங்கலாம். இந்த அம்சம் இந்தியா சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு வசதியானது என்று தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications