சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (எஸ்ஏஎம்ஐஎல்) நிறுவனம் வாகன உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பிஎஸ்இ 100 இன்டெக்ஸில் இந்நிறுவன பங்கு இடம் பிடித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனமாகும். சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. மேலும் டிவிடெண்டு மற்றும் போனஸ் பங்கும் அறிவித்துள்ளது.
லாபம்
2025 மார்ச் காலாண்டில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,050.50 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 23.43 சதவீதம் குறைவாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,372 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும், வருவாய் அதிகரித்துள்ளது.

போனஸ் பங்கு
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் வருவாயாக ரூ.29,317 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 8.34 சதவீதம் உயர்வாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.27,058 கோடி ஈட்டியிருந்தது. இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 1:2 விகிதத்தில் போனஸ் பங்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒவ்வொரு 2 பங்குகளுக்கு ஒரு பங்கு போனஸாக வழங்கப்படும். இது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது, அஞ்சல் வாக்கெடுப்பு வாயிலாக ஒப்புதல் பெறப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிடெண்டு
இந்நிறுவனம் 2024-5ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.0.35 இறுதி டிவிடெண்டாக அறிவித்துள்ளது. இது 2025 ஆகஸ்ட் 28ம் தேதியன்று நடைபெறும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, ரூ.1 லட்சம் முக மதிப்புள்ள பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ.8,500 கோடி வரை நிதி திரட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் லாபம் சரிவு கண்டுள்ள போதிலும், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை உயர்ந்தது.
பங்கு விலை ஏற்றம்
மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவன பங்கின் விலை 2 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. இன்று பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.158.65 வரை சென்றது.
போனஸ் பங்கு அறிவித்த ஷில்சார் டெக்னாலஜிஸ்.. முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications