மொத்த விலை குறியீடு மீதான பண வீக்கம் 6 மாதம் இல்லாத அளவிற்குக் குறைந்தது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்கு சந்தை இன்று லாபத்துடன் முடிவடைந்துள்ளது.
ஆனால் பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியால் பங்குகளின் விலை 12 சதவீதம் வரை இன்று சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
இன்றைய நிலவரம்
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்சென்ஸ் 0.41 சதவீதம் என 141.52 புள்ளிகள் உயர்ந்து 34,297.47 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 0.42 சதவீதம் என 44.60 புள்ளிகள் உயர்ந்து 10,545.50 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
பணவீக்கம்
ஜனவரி மாதத்திற்கான மொத்த விலை குறையீடு மீதான பணவீக்கம் 6 மாதம் இல்லாத அளவிற்குக் குறைந்து 2.85 சதவீதம் குறைந்தது மற்றும் லார்ஜ் கே பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டது போன்ற காரணங்களால் பங்கு சந்தை நல்ல முன்னேற்றத்தினைக் கண்டுள்ளது.
துறை வரியான அறிக்கை
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் மெட்டல், எண்ணெய் & எரிவாயு, வங்கி மற்றும் எப்எம்சிஜி பொருட்கள் அதிகளவில் லாபம் அளித்தது. அதே நேரம் டெலிகாம், கேப்பிட்டல் கூட்ஸ், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் நட்டத்தினை அளித்தன.
முக்கியப் பங்குகள்
ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், பவர் கிரிட்டு மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனப் பங்குகள் லாபம் அளித்தன. மறுபக்கம் ஹீரோ மோட்டோ கார்ப், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் மற்றும் எல்&டி நிறுவன பங்குகள் நட்டத்தினை அளித்தன.