ஜூலை மாதம் F&O வியாழக்கிழமையுடன் முடிவடைய உ ள்ள நிலையில் இந்திய பங்கு சந்தை இன்று பிளாட்டாகவே முடிந்தது. அதே நேரம் சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை போன்றே புதன் கிழமையும் புதிய உச்சத்தினைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவையின் தாக்கத்தால் இந்திய பங்கு சந்தையின் இன்றைய நிலை என்ன என்று இங்குப் பார்க்கலாம்.
பங்கு சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 33.13 புள்ளிகள் என 0.09% உயர்ந்து 36,858.23 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 2.30 புள்ளிகள் என 0.02 சதவீதம் சரிந்து 11,132.00 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியான நிலவரம்
பொதுத் துறை வங்கி நிறுவனங்கள், மெட்டல் துறை சார்ந்த பங்குகள் உயர்ந்த நிலையில், பார்மா, ஐடி, ஆட்டோமொபைல், ரிலையாட்டி பங்குகள் சரிந்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், வேதாந்தா, ஓஎஞிசி, எச்டிஎப்சி பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
மஹிந்தரா & மஹிந்தரா, பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, எண்டிபிசி உள்ளிட்ட பங்குகள் நட்டத்தினையும் அளித்துள்ளன.