இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டு தொடர்ந்து 7 வது நாளாக உயர்வைச் சந்தித்துள்ளது. இன்றைய பங்கு சந்தை வர்த்தகத்தில் ஐடி நிறுவனங்கள் நல்ல லாபத்தினை அளித்துள்ளன.
மும்பை பங்கு சந்தை குறியீடனா சென்செக்ஸ் 91.16 புள்ளிகள் என 0.27 சதவீதம் உயர்ந்து 33,679.24 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 40.95 புள்ளிகள் என 0.4 சதவீதம் உயர்ந்து 10,389.70 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
மெட்டல் துறை பங்குகளைத் தவிரப் பிற பங்குகள் அனைத்தும் மும்பை பங்கு சந்தையில் லாபத்தினையே அளித்துள்ளன. நுகர்வோர் சாதன பொருட்கள் 2.79 சதவீதமும், ஐடி நிறுவன பங்கள் 0.85 சதவீதமும், டேக் நிறுவனப் பங்குகள் 0.79 சதவீதமும் சராசரியாக லாபம் அளித்துள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
பஜாஜ் ஆட்டோ (+1.07%), எம் & எம் (+ 1.05%), கொடக் பாங்க் (+ 0.99%) மற்றும் பவர் கிரிட் (+ 0.91%)
நட்டம் அளித்த பங்குகள்
பாரத ஸ்டேட் வங்கி (-0.79%), அதானி போர்ட்ஸ் (-0.74%), ஹீரோ மோட்டோகார்ப் (-0.66%), ஐசிஐசிஐ வங்கி (-0.64%) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் (-0.56%)