மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை துவங்கிய போதே உயர்வுடன் துவங்கிய முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீட்டிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 49,733.84 புள்ளிகளை அடைந்த நிலையில், இன்று காலை துவங்கும் போது கிட்டதட்ட 350 புள்ளிகள் உயர்வு 50,093 புள்ளிகளில் வர்த்தகத்தைத் துவங்கியது.
இதன் பின்பும் தொடர்ந்து வளர்ச்சியின் மூலம் சென்செக்ஸ் 50,375.77 புள்ளிகளை எட்டி காலை வர்த்தகத்தில் உயர்வை எட்டியது.
முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் உச்ச அளவை அடைந்த அடுத்த சில நிமிடத்தில் முதலீட்டாளர்கள் பங்குகள் லாப நோக்கத்திற்காக அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தாலும், பியூச்சர் ஆர்டர்கள் இன்று முடிவடையும் காரணத்தாலும் மளமளவெனச் சரிய துவங்கியது.
தடாலடி சரிவில்
இந்தத் தடாலடி சரிவில் நேற்றைய அளவீட்டை விடவும் சுமார் 200 புள்ளிகள் வரையில் சரிந்தது. ஆக மொத்தம் நேற்றைய வர்த்தக அளவிலிருந்து வர்த்தகம் துவங்கி சில மணிநேரத்தில் 640 புள்ளிகள் வரையில் உயர்ந்து 800 புள்ளிகள் வரை சரிந்து 49,535.98 புள்ளிகளை அடைந்தது.
வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள்
இன்று காலை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் இத்துறை பங்குகள் அதிகளவிலான சரிவைப் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் 11.20 மணி அளவில் சென்செக்ஸ் குறியீடு சரிவில் இருந்து மீண்டு 65 புள்ளிகள் உயர்வில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி குறியீடு
இன்றைய வர்த்தகத்தில் நிப்டி குறியீடு 15,044.35 புள்ளிகள் வரையில் உயர்ந்து 14,814.45 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. மேலும் 11.20 மணிநேரத்தில் 14,873 புள்ளிகளில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்
இதே வேளையில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்து அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையை வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்பட்ட பின்பு அந்நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளதால் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பழைய நிலையிலேயே வைக்க முடிவு செய்துள்ளது. இதனால் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றத்தையும் செய்யவில்லை.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications