பங்குச் சந்தையில் எப்போது ஒரு நிறுவனத்தின் பங்கு உயரும் அல்லது சரியும் என்று உறுதியாக சொல்ல முடியாது. பல மாதங்களாக சரிவை மட்டுமே சந்தித்து வந்த ஒரு பங்கு திடீரென விலை உயர தொடங்கும். இதற்கு உதாரணமாக இ2இ நெட்வொர்க்ஸ் நிறுவன பங்கினை சொல்லலாம். 4 மாதங்களாக சரிவு கண்டு வந்த இப்பங்கு கடந்த 2 தினங்களாக விறுவிறுவென ஏற்றம் கண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையை சேர்ந்த நிறுவனம் இ2இ நெட்வொர்க்ஸ் லிமிடெட். இந்நிறுவனம் கிளவுட் சேவைகளை வழங்கி வருகிறது.
நாட்டின் முன்னணி உள்கட்டமைப்பு வணிக நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்ட் டி) அண்மையில் இந்நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை ரூ.1,079.27 கோடிக்கு கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 சதவீத பங்குகளை விரைவில் கையகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு மே 30ம் தேதிக்குள் ரூ.327.75 கோடிக்கு இந்த 6 சதவீத பங்குகளை எல் அண்டி வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல் அண் டி நிறுவனமே, இ2இ நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக உள்ளது. இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2024 செப்டம்பர் காலாண்டு) இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.11.59 கோடி ஈட்டியுள்ளது.
இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 108 சதவீதம் அதிகமாகும். 2023 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.5.58 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.
2024 செப்டம்பர் காலாண்டில் இ2இ நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.41.6 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 74 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.23.95 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.
முந்தைய நிதியாண்டின் 3வது காலாண்டிலிருந்து இந்நிறுவனத்தின் முடிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அதேசமயம் தொடர்ச்சியான அடிப்படையில் அதாவது இந்த காலாண்டின் முடிவுகளை முந்தைய காலாண்டின் முடிவுகளுடன் ஒப்பிட்டால் சிறிய சறுக்கலை கொண்டுள்ளது.
இந்நிறுவன பங்கு கடந்த நான்கு மாதங்களால் முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பை கொடுத்தது. இந்த காலத்தில் இ2இ நெட்வொர்க்ஸ் லிமிடெட் பங்கு விலை 60 சதவீதம் சரிந்தது. 2024 நவம்பர் 7ம் தேதியன்று தேசிய பங்குச் சந்தையில் வர்ததகத்தின் இடையே இப்பங்கின் விலை 52 வார புதிய உச்சமான ரூ.5,487.65ஐ எட்டியது.
ஆனால் அதன் பிறகு பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டது. இந்நிலையில், நேற்று தேசிய பங்குச் சந்தையில் இ2இ நெட்வொர்க்ஸ் லிமிடெட் பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து சர்க்கியூட்டை எட்டியது. நேற்று இப்பங்கின் விலை ரூ.2,308.30ல் முடிவுற்றது.
இந்நிலையில், இன்று தொடர்ந்து 2வது நாளாக இப்பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட்டை தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.115.40 உயர்ந்து ரூ.2,423.70ஆக இருந்தது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications