ஒரே ஒரு ரெய்டு... ரூ.135 கோடி பணம், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் சிக்கியது

டெல்லி: 20,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய சகாரா குரூப் நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களின் டெல்லி மற்றும் நொய்டா பகுதிகளில் இருக்கும் அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையின் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் வருமான வரித்துறையினருக்கு 135 கோடி ரூபாய் பணம் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கிடைத்துள்ளது.

எல்லாமே பொதுத்துறை வங்கிக்கு தான்...

எல்லாமே பொதுத்துறை வங்கிக்கு தான்...

சகாரா குழுமம் தலைவர்களுக்கும் அபராத தொகை செலுத்த அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு அவர்களின் உடைமைகள் மற்றும் சொத்துகளை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இச்சோதனையில் கிடைத்த அனைத்து பொருட்களும் டெல்லி உள்ள ஒரு பொதுத்துறை வங்கிக்கு அளிக்கப்படும் என வருமான வரித்துறையின் தெரிவித்துள்ளனர்.

தோராயமான அளவுகள்

தோராயமான அளவுகள்

மேலும் வருமான வரித் துறை அதிகாரி ஒரு கூறுகையில் குறிப்பிட தொகை அனைத்தும் தோராயமான அளவுகள் தான், ஆனால் சோதனையில் சிக்கிய அனைத்தும் மத்திய வங்கிக்கு கொண்டு சேர்க்கப்படும் என உறுதி அளித்தார்.

சொத்துகள் முடக்கம்..

சொத்துகள் முடக்கம்..

இவ்வழக்கும் துவங்கிய சில நாட்களிலேயே இந்நிறுவனத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரின் கணக்குள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டது. இதன்பேரில் தற்போது முடக்கப்பட்ட சொத்துகளை சோதனை செய்து வருவதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

சகாரா குழுமம்

சகாரா குழுமம்

இது குறித்து இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தற்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் நிறுவனத்தை நடத்தவும், அபராத தொகையை செலுத்தவும் கடுமையாக முயற்சி செய்து வருகிறோம். மேலும் வங்கிகளில் இருந்து தற்போது கடன் தொகை கிடைப்பது மிகவும் கடினம். இப்படி இருக்கும் போதும் செபி எந்த கணக்கை எப்போதும் முடக்கும் என்பது தெரியாத நிலையில் இருக்கிறோம். என்று அவர் கூறினார்.

தகவல்

தகவல்

மேலும் வருமான வரித் துறைக்கும் நவம்பர் 22ஆம் தேதி சோதனை நடத்தப்பட்ட டெல்லி மற்றும் நொய்டா பகுதியில் கணக்கிடப்படதாக பெரும் தொகை குவிந்துள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்திருந்தது. இதன் படியே சோதனையும் நடந்துள்ளது.

அன்னிய பரிமாற்றம்

அன்னிய பரிமாற்றம்

மேலும் மத்திய வரி வாரியம் இந்நிறுவனம் ஹவாலா மோசடியில் ஈடுப்பட்டு உள்ளதா என்பதையும் விசாரித்த வண்ணம் உள்ளது.

கருப்பு பணம்

கருப்பு பணம்

மேலும் இச்சோதனை வழக்கை மத்திய கருப்பு பணம் ஒழிப்பு அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது.

சொகுசான ஜெயில் வாழ்க்கை

சொகுசான ஜெயில் வாழ்க்கை

மக்களின் பணத்தை சுருட்டிய இந்நிறுவனத்தின் மூன்று நிர்வாக இயக்குனர்களுக்கும் டெல்லி திகார் ஜெயிலில் 31 இலட்ச ரூபாய் செலவில் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். இதை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+