டெல்லி: மத்திய அரசின் "டிஜிட்டல் இந்தியா" திட்டத்தில் இண்டர்நெட் தேடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் இணைந்திட ஆர்வம் காட்டியுள்ளது. இத்திட்டத்தில் கூகிள் நிறுவனம் தனது பங்களிப்பை பற்றி ஆலோசனை செய்ய இந்நிறுவனத்தின் தலைமை இண்டர்நெட் ஆலோசகரான வின்டான் செர்ப் அவர்கள், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் அவர்களை சந்தித்தார்.
ஆரம்பரகட்ட பேச்சுவார்த்தை
இதுகுறித்து வின்டான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இணையும் பணியில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளோம். அமைச்சகத்திடம் பல மேம்பட்ட திட்டங்கள் இருக்கும், எனினும் எங்களிடம் சில திட்டங்கள் உண்டு இதை விவரிக்க இந்த சிந்திப்பு கண்டிப்பாக பயன்படும் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
அடிப்படை கட்டமைப்புகள் மிகவும் அவசியம்
மேலும் அவர், இத்திட்டத்தில் பல தனியார் நிறுவனங்கள் இணைய உள்ளது நிதர்சனமான உண்மை, ஆனால் இத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த மத்திய அரசு நாட்டி சில அடிப்படை கட்டமைப்புகளை அமைக்க வேண்டும் எனவும் வின்டான் தெரிவித்தார்.
"டிஜிட்டல் இந்தியா"
மத்திய அரசு "டிஜிட்டல் இந்தியா" திட்டத்தின் மூலம் நாட்டில் இருக்கும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளை இணைத்து இண்டர்நெட் சேவை அளிப்பது, இ-கவர்னன்ஸ் மற்றும் மொத்த இந்தியாவையும் இணைக்கப்பட்ட அறிவுசார் பொருளாதார நாடாக உருவாக்குவேதே.
பெண்கள்
மேலும் இத்திட்டத்தின் முதல் படியாக அதிகப்படியான பெண்களை இண்டர்நெட் பயன்படுத்த வைப்பது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொழில் மற்றும் தொழில்துறை
அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் சிறு மற்றும் குறு தொழில் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்த இன்றைய காலத்தில் இண்டர்நெட் கண்டிப்பாக உதவும், இதை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் ஒரு தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications